tamilnadu

img

நெல்லையைச் சிவப்பாக்கிய போக்குவரத்து தொழிலாளர் பேரணி

திருநெல்வேலி, ஜுலை 23- நெல்லையில் நடைபெற்றுவந்த சிஐடியு போக்குவரத்து ஊழியர்களின் மூன்று நாள் மாநில மாநாடு பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியுடன் செவ்வாயன்று நிறைவுபெற்றது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர்  சம்மேளனத்தின் 14ஆவது மாநில மாநாடு கடந்த ஞாயிறன்று (ஜுலை 21) திருநெல்வேலியில் துவங்கியது.  மாநிலம் முழுவதிலுமிருந்தும் அரசுப் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தொழி லாளர்களின் பிரதிநிதிகளாக சம்மேளன நிர்வாகிகள் உட்பட 525 பேர் பங்கேற்றனர். பிரதிநிதிகளின் விவாதத்திற்கு சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் தொகுப்புரை வழங்கினார்.

 தலைவர் அ.சவுந்தரராசன் நிறைவுரையாற்றி னார். டி.காமராஜ் நன்றி கூறினார். சிஐடியு தலைவர்கள் ம.ராஜாங்கம் உள்ளிட்ட மூத்த தோழர்களுக்கு மாநாட்டில் சிறப்பு செய்து சால்வை அணிவிக்கப்பட்டது.  சம்மேளனத்தின் தலைவராக அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளராக கே.ஆறுமுக நயினார். பொருளாளராக வி.சசிக்குமார் (மாநகரம்) தேர்வு செய்யப்பட்டனர். துணை பொதுச்  செய லாளர்களாக வி.தயானந்தன் (மாநகரம்), டி.ஜான்சன் கென்னடி (ஈரோடு), ஏ.கனகசுந்தரம் (மதுரை), துணை தலைவர்களாக எம்.சந்திரன்,ஏ.பி.அன்பழகன், வி.பிச்சை, கடலூர் ஜி.பாஸ்கரன், வேலூர் எஸ்.பரசுராமன், காஞ்சி என்.நந்தகோபால்,  தருமபுரி எஸ்.சண்முகம், எஸ்இடிசி எம்.கண்ணன், கும்பகோணம் ஜி.மணிமாறன், புதுக்கோட்டை பால சுப்ரமணியம், நாகர்கோவில் ஸ்டீபன் ஜெயகுமார் ஆகியோரும், இணை செயலாளர்களாக எஸ்இடிசி கனகராஜ், திருச்சி கருணாநிதி, திருப்பூர் செல்ல த்துரை, விருதுநகர் ஆர்.வெள்ளத்துரை, மாநகர் ஆர்.துரை, காரைக்குடி தெய்வீரபாண்டியன், திண்டுக்கல் ஐ.ஜெயக்குமார், சேலம் கிருஷ்ண மூர்த்தி, திருவண்ணாமலை முரளி, திருநெல்வேலி ஜோதி, விழுப்புரம் ரகோத்தமன் ஆகியோருடன் நிர்வாக குழு உறுப்பினர்களாக 73 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

பேரணி – பொதுக்கூட்டம் 

பாளையங்கோட்டை சித்தா மருத்துவக்கல்லூரி எதிரில் (தோழர் கோ.வீரய்யன் நினைவு திடல்) நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வர வேற்புக்குழு தலைவர் எஸ்.பெருமாள் தலைமை வகித்தார்.  சம்மேளனத் தலைவரும் சிஐடியு தலை வருமான அ.சவுந்தரராசன், சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார், நிர்வாகிகள் ஏ.பி. அன்பழகன், எம்.சந்திரன், ஆர்.எஸ்.செண்பகம், சிஐடியு நெல்லை மாவட்டச் செயலாளர் ஆர். மோகன், தலைவர் எம்.வேல்முருகன், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் இரா.பேச்சிமுத்து, எஸ்.ஜோதி, எஸ்.வின்சென்ட் ஆகியோர் பேசினர். முன்னதாக பாளையங்கோட்டை வாட்டர் டேங்க் அருகிலிருந்து குடும்பத்துடன் பல்லாயிரக் கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
 

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) மாநில மாநாட்டின் நிறைவாக நடைபெற்ற எழுச்சிமிகு பேரணியின் முகப்பில் செங்கொடிகள் படபடக்க, 
போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் அணி வகுத்த காட்சி.  உள்படம் : புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட அ.சவுந்தரராசன், கே.ஆறுமுகநயினார், சசிகுமார்.