கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய 9.1 டிஎம்சி தண்ணீரை திறக்க மறுப்பதை கண்டித்தும், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்த உத்திரவிடக் கோரியும் சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பி.கற்பனைச்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், துணைத்தலைவர் சதானந்தம், துணைச் செயலாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலாளர் சாமி, நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாவட்டப் பொருளாளர் செல்லையா, புவனை ஒன்றியச் செயலாளர் காளி. கோவிந்தராஜன், கீரை ஒன்றியச் செயலாளர் சிவராமன், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.