திண்டுக்கல் அய்யன்குளத்தில் வசிக்கும் ஏழை - எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் வாலிபர் சங்கம், எல்.ஐ.சி.ஊழியர்கள் சார்பாக வீடுவீடாக சென்று வழங்கப்பட்டன. இதில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ், மாவட்டப்பொருளாளர் கிருஷ்ணவேணி, மாநில செயற்குழு உறுப்பினர் வளர்மதி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பாலாஜி, மாவட்டத் தலைவர் விஷ்ணு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.