பெரம்பலூர், பிப்.7- அரியலூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த ஒரு தனியார் பேருந்து குன்னம் அருகே ஒதியம் பிரிவு பாதை என்ற இடத்தில் உள்ள ஒரு வளைவில் வந்த போது, சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து சாம்பல் பவுடர் ஏற்றிக் கொண்டு அரியலூர் நோக்கி சென்ற ராட்சத டேங்கர் லாரி யின் முன்பகுதியில் மோதி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 15 அடி ஆழ சாலையோர பள்ளத்திற்குள் பேருந்து தலைகுப்புற விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த கைக் குழந்தைகள், சிறுவர், சிறுமியர், பெண்கள், முதியவர்கள் உட்பட 71 க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்து பேருந்துக்குள் சிக்கிக் கொண்டு கூச்சலிட்டனர். விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்தில் திரண்ட பொது மக்கள் பேருந்துக் குள் சிக்கிக் கொண்ட பயணிகள் அனை வரையும் மீட்டு 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்சில் சிகிச்சைக்காக பெரம்பலூர் மற்றும் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இந்த விபத்தில் 9 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பலியானார். 10 க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் ஏராள மான காயமடைந்தவர்கள் நிறைந்த தால் அரசு மருத்துவமனையில் போதிய வசதியின்றி காயத்துடன் தவித்தனர். காயமடைந்தவர்களை குன்னம் எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்தி ரன் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்து பற்றி குன்னம் காவல்துறையினர் விசாரிக்கின்றனர். விபத்தால் பெரம் பலூர்- அரியலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.