tamilnadu

img

அச்சகங்களை கட்டுப்பாடுடன் அனுமதிக்க வேண்டுகோள்

சென்னை, ஏப்.19- சிறு, குறு தொழிலான அச்சகங்களை திங்களன்று (ஏப். 20) முதல் இயங்க அனு மதிக்க வேண்டும் என்று  தமிழ்நாடு அச்சக உரிமையா ளர்கள், பணியாளர்கள் சங் கம் வலியுறுத்தி உள்ளது. தமிழகத்தில் 2 லட்சம் அச்சகங்கள் உள்ளன. சென்னை மற்றும் அதன் புறநகரில் மட்டும் 10 ஆயிரம் சிறு, குறு அச்சகங்கள் உள்  ளன. இவற்றில் மெஷின் மேன், பைண்டர், உதவியா ளர் என 6 லட்சம் பேர் பணி யாற்றுகின்றனர். அச்சு தொழிலை ஒட்டி டிடிபி ஆப்ரேட்டர், பல்க் பைண்டர், பிளேட்மேக்கர் உள்ளிட்ட பணிகளில் பல லட்சம் பேர்  உள்ளனர். இவர்கள் அனை வரும் முறைசாரா தொழி லாளர்களாகவே உள்ளனர்.

அச்சகங்களை ஏப்.20 முதல் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதிக்க வேண் டும், சிறு, குறு அச்சக உரி மையாளர்கள், அதில் பணி யாற்றும் முறைசாரா தொழி லாளர்களின் குடும்பங்க ளுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவா ரணம் வழங்க வேண்டும், அச்சக பணியாளர்களுக்கு வாரியம் அமைத்து அதன் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்  என்று சங்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் தி.ஜெய்சங்கர் முதலமைச்சருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

மேலும், ஊரடங்கு அம லில் உள்ள காலத்திற்கு மின்  கட்டணத்திலிருந்து விதி விலக்கு அளிக்க வேண்டும். அச்சக பணியாளர்களுக்கு குழு காப்பீட்டு திட்டத்தை உருவாக்க வேண்டும். அச்சக உரிமையாளர்களின் வங்கி கடனுக்கான 3 மாத  வட்டியை அரசு ஏற்க வேண் டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.