tamilnadu

img

திருபெரும்புதூர் அருகே 3 குழந்தைகளை கொன்று தொழிலாளியும் தற்கொலை

காஞ்சிபுரம், மே 19- திருப்பெரும்புதூர் அருகே குடும்பத் தகராறில் ஏற்பட்ட பிரச்சனையில் 3 குழந்தைகளை கொன்று துப்புரவு தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தி ருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே வட மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் ( 37). இவரது மனைவி கோவிந்தம்மாள் என்ற துளசி (32). இவர்களுக்கு ராஜேஸ்வரி (12), ஷாலினி (10) என்ற 2 மகள்களும், சேதுராமன் (8) என்ற மகனும் இருந்தனர். ஆறுமுகமும் மனைவி கோவிந்தம்மாளும்  திருப்பெரும்  புதூரிள்ள தனியார் கம்பெனியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். கடந்த சில நாட்களாக ஆறுமுகம், கோவிந்தம்மாள் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்த தாக கூறப்படுகிறது.

தகராறு ஏற்படும்போது கோவிந்தம்மாள் கோபித்துக் கொண்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விடுவார். பின்னர் ஆறுமுகம் மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவது வழக்கம் எனவும் கூறப்  படுகிறது. வழக்கம்போல ஆறு முகத்திற்கும் கோவிந்தம்மா ளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. காலை வேலைக்கு சென்ற கோவிந்தம்மாள் மாலை வீட்டுக்கு  வந்து பார்த்தபோது மூத்த மகள் ராஜேஸ்வரி கழுத்து நெரிக் கப்பட்டு பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரது அழுகுரலை கேட்டு  வந்த அக்கம் பக்கத்தினர் ஆறு முகம் மற்றும் 2 குழந்தைகளை தேடினர். ஆறுமுகம் ஊருக்கு அருகே உள்ள சுடுகாடு பக்கத்தில்  உள்ள மரத்தில் தூக்கில் பிண மாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் 2 குழந்தைகளை தேடும்  போது அருகே இருந்த கிணற்றில்  ஷாலினி, சேதுராமன் இருவரும் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த  காஞ்சிபுரம் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் சாமுண் டீஸ்வரி, ஸ்ரீபெரும்புதூர் சரக உதவி காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் விநாயகம் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு  சென்று ஆறு முகம், ராஜேஸ்வரி, ஷாலினி, சேதுராமன் ஆகியோரின் உடல்  களை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 மகள்கள் மற்றும் மகனை கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.