முதல்வருக்கு சிஐடியு ஆட்டோ சம்மேளனம் கோரிக்கை மனு
சென்னை,ஜூன் 27- வருமானம் இல்லாததால் ஆட்டோ தொழி லாளர்களின் தற்கொலைகள் தொடர்ந்து நிகழ்கின்றன. இந்த தற்கொலைகளை தடுத்திட தமிழக அரசு ரூ.15 ஆயிரம் நிவா ரணம் வழங்க வேண்டும். இறந்த ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்த கோரிக்கை மனு தமிழக முதல்வருக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது. இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் வீ.குமார், பொதுச்செயலாளர் எம்.சிவாஜி ஆகியோர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ஆட்டோக்கள் மூன்று மாதம் முடக்கப் பட்டதாலும், முடக்கத்திற்கு பிறகு போதிய சவாரி கிடைக்காததால் வருமானம் இல்லா மல் ஒவ்வொரு ஆட்டோ தொழிலாளியும் கடு மையான வறுமையுடன் வாழ்ந்து வருகி றார்கள். தங்கள் வீட்டுக்கு தேவையான அத்தி யாவசிய பொருட்களை வாங்க முடியாமலும், வாங்கிய வாகன கடனுக்கு மாதாந்திர தொகை கட்டமுடியாமலும் ஒவ்வொரு ஆட்டோ தொழிலாளியும் அவதிப்படுகி றார்கள்.
தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் மருத்துவ தேவையை, உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் மனமுடைந்த ஆட்டோ தொழிலாளர்கள் இருவர் இக் காலத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். 26.06.2020 அன்று புதுக் கோட்டையில் சுப்பிரமணியன் என்ற தொழி லாளி தன் மனைவிக்கு மருந்து வாங்க பணமில்லை என்ற வேதனையில் மனம் உடைந்து, கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்துள்ளார். அதேபோல் 8.06.2020 அன்று கும்ப கோணத்தைச் சேர்ந்த ரகுபதி என்கிற ஆட்டோ தொழிலாளி குடும்பம் நடத்தக்கூட சம்பாதித்து கொடுக்க முடியலையே என்கிற வேதனையில் மூன்று கடிதங்கள் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். இதேபோல் தமிழகம் முழுவதும் பல நூற்றுக்கணக்கான ஆட்டோ தொழிலா ளர்கள் சொந்த ஆட்டோக்களை வறுமை யின் காரணமாக விற்பனை செய்துவிட்டு வேதனையோடு வாழ்ந்து வருகிறார்கள். அத்தனை தொழிலாளர்களின் வேதனையின் வெளிப்பாடுதான் இந்த இரண்டு ஆட்டோ தொழிலாளியின் தற்கொலை மரணங்கள் ஆகும். எனவே தமிழக அரசானது மேலும் காலம் தாழ்த்தாமல் ஒவ்வொரு ஆட்டோ தொழி லாளர் குடும்பத்திற்கும் 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதோடு, தற்கொலை செய்து கொண்ட புதுக்கோட்டை ஆட்டோ தொழிலாளி சுப்பிரமணியம் குடும்பத்திற் கும், கும்பகோணம் ஆட்டோ தொழிலாளி ரகுபதி குடும்பத்திற்கும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்சம் ரூபாய் வழங்கி குடும்பங்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.