tamilnadu

img

பள்ளிகள் குழந்தைகளைக் கொண்டாட வேண்டும் திரைப்பட இயக்குனர் சேரன் பேச்சு

புதுக்கோட்டை, பிப்.16- குழந்தைகளைக் கொண்டாடும் பள்ளிகளே சிறந்த பள்ளிகள் என்றார் திரைப்பட இயக்குனர் சேரன். சனிக் கிழமை நடைபெற்ற புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழாவில் அவர் மேலும் பேசி யது: நான் சாதாரண சினிமா ஆப்பரேட்ட ருக்கும், ஆசிரியைக்கும் மகனாகப் பிறந்தவன். எந்தப் பின்புலமும் இல்லா மல் இருபத்து மூன்று வயது வரை வறு மையோடு போராடித்தான் இயக்குன ராக உங்கள் முன்பாக நிற்கின்றேன். அனுபவங்களே எனது வாழ்வை செதுக் கியது. வேறு எங்கும் கேள்விப்படாத புதிய செய்தியாக இந்தப் பள்ளியில் மாதத்தில் ஒருநாள் புத்தகமில்லா தினம் கொண்டாடப்படுவதை அறிந்து மிகவும் மகிழ்துபோனேன்.  குழந்தைகளைக் கொண்டாடும் இந்தப் பள்ளியை மனமார வாழ்த்து கிறேன். ஆசிரியரால் மட்டுமே ஒரு உல கத்தை மாற்றிக்காட்ட முடியும். ஒரு பள்ளிக்கூடம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக ஸ்ரீவெங்க டேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி விளங்குகிறது. மதிப்பெண்களைப் பெரும் இயந்திரங்களாக அல்லாமல் வாழ்க்கை அனுபவங்களைக் கற்றுக் கொண்டு மாணவர்களின் உறவுப் பாலத்தை அழகாக விரிய செய்ய வேண் டும் எனப் பேசினார். அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர் சுப்பையா தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி வர வேற்றார். சுமதிஸ்ரீ கருத்துரை வழங்கி னார். பள்ளியின் ஆலோசகர் மு.அஞ்சலி தேவி, நிர்வாக இயக்குனர் நிவேதிதா மூர்த்தி, துணைமுதல்வர் குமாரவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியர் வெங்கடேஸ்வரன் நன்றி கூறி னார். காசாவயல்கண்ணன், ரம்யா ஆகி யோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி னர். விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.