tamilnadu

img

நிலுவைத் தொகை வழங்கக் கோரி துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) முற்றுகை போராட்டம் நடத்தியது. துப்புரவு ஒப்பந்தத் தொழிலாளர்கள் அரசாணை(2டி) எண்: 62 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை கடந்த 2017 அக்டோபர் 11ன் படி மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு ஒருநாள் ஊதியம் 385, வீதம் மாதம், 11,935 மறுநிர்ணயம் செய்து 1-04-2019 முதல் நிலுவைத் தொகை கிடைத்திட 31-10-2019 தேதி ஆட்சியர் உத்தரவின்படி வழங்கிட வலியுறுத்தியும், நவம்பர் மாத சம்பளத்தை உடன் வழங்கிட வலியுத்தியும்  இந்தப் போராட்டம் நடந்தது. போராட்டத்துககு உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்கம் (சிஜடியு) மாவட்டத் தலைவர் ப.சண்முகம் தலைமையும், அறந்தாங்கி கிளைச்செயலாளர் கணேசன் முன்னிலையும் வகித்தனர். நூற்றுக்கணக்கான துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர்.