tamilnadu

img

குளத்தில் மராமத்துப் பணிகளைத் தொடங்கிய செரியலூர் இளைஞர்கள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் செரியலூர் கிராமத்தில் சீமை கருவேல மரங்கள் மண்டிக் கிடந்த குளத்தை இளைஞர்கள் தன்னார்வமாக மராமத்துப் பணிகளை மேற்கொண்ட னர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த செரியலூர் இனாம் கிராமத்தில் உள்ள அய்யன் குளம் நிரம்பிய பிறகு மீண்டும் காட்டாற்றி கலக்கும். இந்த குளங்கள் பல வரு டங்களாக மராமத்து செய்யப்படாமல் உள்ளதால் தண்ணீர் இன்றி சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், செரியலூர் கிராமத்தில் கல்லணை தண்ணீரைக் பாசனத்திற்கு கொண்டு வரும் வாய்க்காலை உள்ளூர் இளைஞர்கள் மராமத்து செய்தனர். இதனைப் பார்த்த கைஃபா அமைப்பினர் பல வருடங்களாக மராமத்து செய்யப்படாமல் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்துள்ள பெரிய ஏரியான அய்யன் குளத்தை நாங்கள் மராமத்து செய்து தருகிறோம் என்று கூறியுள்ளனர். இத்தகவலை அறிந்து மில்கி மிஸ்ட் டைரி நிறுவனத்தை சேர்ந்த சதீஷ்குமார், செரியலூர் அய்யன் குளம் மராமத்துப் பணிக்கான செலவு தொகையை ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு கிராமத்தினர் முன்னிலையில் மராமத்துப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. பல வருடங்களாக மராமத்து செய்யப்படாமல் கிடந்த குளத்தை மராமத்து செய்ய தொடங்கி யுள்ள தன்னார்வ இளைஞர்களை கிராமத்தினர் பாராட்டினார்கள்.