உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் காலத்தில் ,பல நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது.இதில் இந்தியாவும் இருப்பது நிதர்சனமான உண்மை. இதற்கு காரணமாக சொல்லப்படுவது ஊரடங்கு.
ஊரடங்கு காலத்தில் எரிபொருள் தேவை குறைந்த நிலையில்,அதை முதலீடாக வியாபாரம் செய்யும் நாடுகளில் அதிகமான பொருளாதார தாக்கம் ஏற்பட்டது.அதன் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலித்தது.தற்போது ஊரடங்கு தளர்வுகளை இந்தியா மே மாதத்திலிருந்து அறிவித்து வருகிறது.
இந்தியாவின் நிர்வாக திறன் மற்றும் நிதி திறன் குறித்து கடன் மதிப்பீடு முகவர் நிறுவனங்கள் கவலைப்படுவதாக மிஸ்ரா கூறியுள்ளார். கொள்கை ஆதரவு மற்றும் அதிகரித்து வரும் தேவை காரணமாக 2021ம் ஆண்டில் இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிக்க, எந்தவொரு அடிப்படை சக்தியும் இல்லை என்பது மிஸ்ராவின் கருத்து.
இதன் அடிப்படையில் 2021 -ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 4.4%ஆக குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுனர் பிராச்சி மிஸ்ரா கூறியுள்ளார்.