tamilnadu

பிப்.21-ல் பெரம்பலூர் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 21 அன்று காலை 10 மணியளவில் ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளாண் சம்பந்தமான நீர்ப்பாசனம், கடன் உதவிகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். எனவே விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.