பெரம்பலூர், ஆக.5- பெரம்பலூர் ஆட்சியரக அலுவல கத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திங்களன்று ஆட்சியர் வே.சாந்தா தலை மையில் நடைபெற்றது. தேசிய விவ சாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பின்படி நாடு முழுவதும் அந்நந்த மாவட்ட தலைநகரில் உள்ள மாவட்ட ஆட்சியர் மூலம் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனு கொடுக்க முடிவு செய்துள்ளதை தொட ர்ந்து பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் முன்னதாக கோரிக்கை விளக்க போராட்டம் நடத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், தற்பொழுதுள்ள சூழ்நிலையில் நமது நாட்டு விவசாயி கள் கடுமையான நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். உற்பத்தி செய்யும் பொருளுக்கு குறைந்தபட்ச கட்டுப்படி யான விலை கிடைக்காமல் அவதியுறு கின்றனர். இதனால் கடன் சுமையில் தவித்து வருகின்றனர். அதனால் விரக்தி ஏற்பட்டு தற்கொலை செய்து கொள் கின்றனர். 1995-க்கு பிறகு 3.5 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2017-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி நடை பெற்ற விவசாயிகள் நாடாளுமன்றத் தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். அதில் கடன் தொல்லை யிலிருந்து விவசாயிகள் விடுபடு வதற்கு விடுதலை சட்டம் கொண்டு வருவதற்கும், விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்த ஆதார விலையை உத்தரவாதம் செய்யும் சட்டம் கொண்டு வருவதற்கும் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகள் விடுதலை சட்டத்தை நிறைவேற்றுவதாக அளித்த வாக்கு றுதியை தாங்கள் நிறைவேற்றாத கார ணத்தால் நாடு முழுவதும் ஆயிரக்க ணக்கான விவசாயிகள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாக போராட்டம் நடத்தி இப்பிரச் சனை குறித்து குடியரசுத் தலைவரா கிய தங்களது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த மனுவினை மாவட்ட நிர்வாகம் மூலம் அளித்துள் ளோம் என மனுவில் கூறப்பட்டுள்ளது. விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் என்.செல்லதுரை, ராஜா சிதம்பரம், வீ.ஞானசேகரன், ஏ.கே. ராஜேந்திரன், சக்திவேல், பொன்னு சாமி, விநாயகம், வரதராஜி, ஜெய ராமன், ராஜேந்திரன் மற்றும் வேப்பந் தட்டை தங்கராசு உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.