tamilnadu

பாலியல் கொடுமையில்  உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் நிவாரணம் கேட்டு மனு

 பெரம்பலூர், ஜூலை 23- பெரம்பலூர் சட்டப் பேரவை தொகுதி முன்னாள் உறுப்பி னர் ராஜ்குமார் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோர், தங்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கக் கோரி பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.  அந்த மனுவில், பெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான ராஜ்குமார் 2012-ம் ஆண்டு தனது வீட்டுக்கு பணிப் பெண்ணாக வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை யிலுள்ள சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியின் மரணத்துக்கு காரணமான ராஜ்குமாருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து செவ்வா யன்று பெரம்பலூர் வந்த சிறுமியின் பெற்றோர் சந்திரன்- சுசிலா ஆகியோர் பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்த னர். பின்னர் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலா ளர் பி.ரமேஷ் மற்றும் மாதர் சங்க மாவட்ட நிர்வாகி எ. கலையரசி ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு சென்று ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜ ராஜனிடம் மனு அளித்தனர். மிகவும் ஏழ்மையில் வாடிக் கொண்டிருக்கும் தங்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர்.