பெரம்பலூர், டிச.15- தமிழகத்தில் 2018-ல் பணி ஓய்வு பெற்ற சாலை ஆய்வாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டுமென மாநில செயற்குழு வலியுறுத்தியுள் ளது. தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் பெரம் பலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் குலோத்துங்கன், வட்ட பிரதிநிதி சூரியகுமார், கோட்ட செயலாளர்கள் மகேந்திரபாபு, சேகர் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாநில பொதுச்செய லாளர் திருமுருகன் வேலை அறிக்கை யினையும், மாநில பொருளாளர் செல்வராஜன் நிதி நிலை அறிக்கை யினையும் வாசித்தனர். கோட்ட பொரு ளாளர் செல்வராஜ், வட்ட பிரதிநிதி சர வணன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். முன்னதாக பெரம்பலூர் கோட்ட செயலாளர் நீலமேகம் வரவேற்றார். கோட்டத் தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார். கூட்டத்தில் 2006-க்கு முந்தைய நிலையில் உள்ளதை போல் சாலை ஆய்வாளர்கள் அனைவருக்கும் சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை ஊதிய கட்டு மாற்றம் செய்ய வேண் டும். சாலை ஆய்வாளர்களுக்கு இள நிலை தொழில் வரைவு அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும். டிப்ளமோ முடித்த சாலை ஆய்வாளர்களுக்கு இளநிலை பொறியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். 2018-ல் பணி ஓய்வு பெற்ற சாலை ஆய்வா ளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.