தீயணைப்பு வீரர்களால் பெரும் சேதம் தவிர்ப்பு
கரூர், டிச.3 - கரூர் மாவட்டம், புகளுர் வட்டத் திற்குட்பட்ட வேலாயுதம்பாளை யத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்திற்கு அருகே உள்ள புகளுர் துணை மின் நிலையத்தில் உள்ள தானியங்கி மின்மாற்றியில் செவ்வாய்கிழமை காலை திடீரென்று ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் பெரும் கரும்புகை வெளியேறியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டல மாக மாறியது. புகளூர் துணை மின் நிலையத்தில் மொத்தம் 3 தானியங்கி மின்மாற்றி கள் உள்ளன. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து கரூர் மாவட்டத்தில் உள்ள 16 துணை மின் நிலையங்களுக்கும், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் சில பகுதி களுக்கும் மின் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது.
இதில் உள்ள 100 எம்.வி.ஏ தானியங்கி மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இத்தகவல் அறிந்ததும் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறை வீரர்கள், தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாரத் பெட்ரோலியம் லிமிடெட் நிறு வனத்தின் தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 55 பேர் தொடர்ந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த தீ மற்ற இரண்டு தானி யங்கி மின்மாற்றியில் பரவாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் மிகப்பெரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் காவல்துறை யினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
இந்த தீ விபத்தை பார்வையிட்ட பின்னர் மாவட்ட ஆட்சியர் த.அன்பழ கன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது, புகளுர் துணை மின்நிலையத் தில் உள்ள மின்மாற்றி ஒன்றில் எதிர் பாராத விதமாக தீ விபத்து ஏற்பட் டது. மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர் களின் அர்ப்பணிப்பு மிக்க முயற்சி யால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பான நிலை ஏற்படுத்தப் பட்டது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட அனைத்து தீயணைப்பு வீரர் களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த பாராட்டு, வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த தீ விபத்தின் காரணமாக மின் விநியோகம் பாதிக்கப்படாமல், மீதமுள்ள மின்மாற்றிகள் மூலம் மின் விநியோகம் தடையின்றி கிடைக்க மின்வாரிய அலுவலர்கள் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர். எத னால் இந்த தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து தமிழ்நாடு மின்சார வாரி யத்தில் தொழில்நுட்ப அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.