tamilnadu

img

மேட்டூர் - கொள்ளிடத்தில் தடுப்பணைகள் : முதல்வர்

சேலம்,செப்.28- மேட்டூரில் இருந்து கொள்ளிடம் வரை எங்கெங்கு தடுப்பணை கட்டலாம் என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக கரூரில் தடுப்பணை கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  சேலத்தில் நடைபெற்ற முதலமைச்ச ரின் சிறப்பு குறை தீர்க்கும் சிறப்பு முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி பங்கேற்று, பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.  இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசுகையில், நீண்ட காலமாக தீர்க்க முடியாத பிரச்சனைகளை தீர்க்கவே இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. சரியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்க ளுக்கு அதற்கான காரணங்களும் தெரிவிக்கப் படும். நீர் மேலாண்மை திட்டங்களுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேட்டூரில் இருந்து கொள்ளிடம் வரை எங்கெங்கு தடுப்பணை கட்டலாம் என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கரூரில் தடுப்பணை கட்டப்படும் என்று கூறினார்.