சென்னை,பிப்.6- நாடாளுமன்றத்தில் கடந்த ஒன்றாம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் புதனன்று (பிப்.5) தான் ரயில்வே திட்டங்களுக்கான அறிவிப்பு வெளி யானது. அதில் 8 தமிழக ரயில்வேத் திட்டங்களுக்கு மோடி அரசு முழுக்கு போட்டுள்ளது. தமிழ்நாட்டில் 846 கி.மீட்டர் நீளத்திற்கு ரூ.11,400 கோடி மதிப்பீட்டில் 2006 முதல் நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு வந்த புதிய ரயில் திட்டங்களை கைவிடும் வகையில் இந்த திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாயை (ஆச்சரி யப்படாதீர்கள் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே) மட்டுமே பாஜக அரசு ஒதுக்கியுள்ளது.
எந்தெந்த திட்டங்கள்
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு எழுதிய கடிதத்தில் இந்த திட்டங்களை முடக்கு வதாக தெரிவித்திருந்தது. அதற்கேற்ப பட்ஜெட் குறித்த திட்ட புத்தகத்தில் இந்த திட்டங்கள் குறிப்பி டப்பட்டாலும் நிதிஒதுக்கீடு வெறும் ஆயிரம் ரூபாய்தான். இந்த திட்டங்களில் திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை, திண்டிவனம்-நகரி, அத்திப்பட்டு -புத்தூர், ஈரோடு- பழனி, சென்னை- கடலூர்- மகாபாலிபுரம், மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி, திருப்பெரும் புதூர்- கூடுவாஞ்சேரி- இருங்காட்டுக்கோட்டை மற்றும் மொரப்பூர்- தருமபுரி ஆகிய புதிய பாதை திட்டங்கள் கைவிடப்படுகின்றன.
இராமேஸ்வரம் -தனுஷ்கோடி பாதைக்கு ரூ.2.7 கோடிதான்
தனுஷ்கோடிக்கு சாலை அமைத்து விட்டோம் என்று பீற்றிக்கொண்ட மோடி அரசு புதிய ரயில் பாதையும் அமைக்கப் போவதாக ஏற்கெனவே அறிவித்தது. 17 கி.மீ நீளமுள்ள இராமேஸ்வரம்- தனுஷ்கோடி பாதைத்திட்டம் சென்ற பட்ஜெட்டில் தான் சேர்க்கப்பட்டது. ரூ.208 கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கு மத்திய அரசு வெறும் ரூ. 2.7கோடிதான் ஒதுக்கியுள்ளது.இதன் அர்த்தம் என்னவென்றால் தமிழகத்திற்கு 2006ல் இருந்து திட்டமிடப்பட்ட புதிய பாதைத் திட்டங்கள் நடைமுறையில் ரத்து செய்யப்பட்டுள் ளன. அதேபோல சின்னசேலம்- கள்ளக் குறிச்சி, காரைக்கால்-பேரளம் ஆகிய ரயில் திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டமும் கைவிடப்படு வதாக பொருளாகும்.
தனியார் ரயில்களுக்கு பச்சை கொடி
பொது பட்ஜெட்டில் ரயில்வே பற்றி நான்கு வரிகள் தான் இருந்தன. அதில் ஒன்று 150 தனியார் ரயில்கள் விடுவது பற்றியதாகும். இந்த 150ல் தெற்கு ரயில்வேயில் இருந்து 11 தனியார் ரயில்கள் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை இரட்டைப்பாதை திட்டம் முடிந்துவிடும். அப்போது தென் தமிழகத்திற்கு ஏராளமான ரயில் வண்டி கள் விடுவது சாத்தியமாகும். இதற்கு ஏற்ப தாம்பரம் 3வது முனையமாக உருவாக்கப்பட்டுள் ளது. தெற்கு ரயில்வேயில் திட்டமிடப்பட்டுள்ள 11 தனியார் ரயில்களில் 5 ரயில்கள் தாம்பரத்தில் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படவுள்ளன.
தனியார் முனையமாகும் தாம்பரம்
தாம்பரம்- கன்னியாகுமரி, தாம்பரம்- திருநெல்வேலி,தாம்பரம்- மதுரை, தாம்பரம்- திருச்சி, தாம்பரம்- பெங்களூரு ஆகிய ஐந்து ரயில்கள் தனியார்மயமாக்கப்படுகின்றன. தாம்பரம் ரயில் முனையமே தனியார் முனைய மாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.அந்த வண்டி களில் பலமடங்கு கட்டணம் தனியார் வசூ லிப்பார்கள் என்பது வெட்ட வெளிச்சம். அதில் ஊழியர்களும் அவர்களே நிய மித்துக் கொள்வார்கள். தென் தமிழக மக்கள் இரட்டைப் பாதைத்திட்டம் முடிவடையும்போது, தங்களுக்கு நியாயமான கட்டணத்தில் ரயில்வே வண்டிகளை இயக்கும் என்று எதிர் பார்த்தது பொய்த்து விடும் நிலை உருவாகி யுள்ளதாக தட்சின ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் (சிஐடியு) செயல் தலைவர் ஆர்.இளங்கோவன் கவலையுடன் தெரிவித்தார். அதுபோல சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் இருந்த கோவை, தில்லி, மும்பை, ஹவுரா,ஜோத்பூர் ஆகிய இடங்களுக்கும் தனியார் ரயில் விடப்படும் என்று நிதியமைச்ச கத்தின் அறிக்கை கூறுகிறது. ரயில்வேக்கு ஆறு ஆண்டுகளில் ரூ.13.69 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்றும், அதில் 87சதமானம் மத்திய அரசு அளிக்கும் என்றும் இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற பட்ஜெட்டில் நிதியமைச்சர் இந்திய ரயில்வேயில் 12 ஆண்டுகளில் 50 லட்சம் கோடி முதலீடு செய்யப் படும் என்று அறிவித்தார். அப்படியானால் 6 ஆண்டு களுக்கு 25லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டமிடவேண்டும். ஆனால் நிதியமைச்சகம் உள்கட்டமைப்பு பைப் லைன் என்ற திட்டத்தில் ரூ.13.69 லட்சம் கோடியை மட்டுமே அறிவித்துள் ளது. இதன் மூலம் சென்ற பட்ஜெட்டில் அறி வித்தது வெறும் பொய் என்று அம்பலமாகி விட்டதாகவும் அவர் கூறுகிறார்.
ரயில்வே வளர்ச்சித் திட்டங்கள் மோசமாக பாதிக்கும்
நடப்பாண்டில் ரூ. 1.3லட்சம் கோடி முதலீடு செய்யவேண்டும். அதில் மத்திய அரசு ரூ.1.15 லட்சம் கோடி தரவேண்டும். ஆனால் கொடுத்த தோ ரூ.55ஆயிரம் கோடி. அதேபோல 2021 வரும் நிதியாண்டில் ரூ. 2.62 லட்சம் கோடி முதலீடு செய்யவேண்டும். அதில் மத்திய அரசு ரூ.2.28 லட்சம் கோடியை வழங்கவேண்டும். ஆனால் மத்திய அரசு கொடுக்கப்போவதோ வெறும் ரூ.46ஆயிரம் கோடிதான். இதனால் ரயில் பயணிகள் பாதுகாப்பும் ரயில் வளர்ச்சித்திட்டங்க ளும் மோசமாக பாதிக்கப்படும் சூழல் உருவாகி யுள்ளது. அதன் விளைவுதான் தமிழகத்தின் புதிய ரயில் திட்டங்களுக்கு முழுக்கு போடப்பட்டுள்ளது.
நடிப்பதில் கில்லாடி
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை தவிர்க்க அரசு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்ற பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையை ஏற்பதுபோல நடித்து விட்டு நடைமுறையில் எப்போதும்போல திட்டங்களுக்கு ஒதுக்கீடும் வெட்டும் நிகழ்த்தியிருக்கிறது மோடி அரசு. தமிழக ரயில்வேத் திட்டங்களுக்கு தொடர்ந்து நிதி ஒதுக்க மறுக்கும் மோடி அரசுக்கு எதிராக ரயில் பயணிகளும் தொழிற்சங்கங்களும் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.
-அ.விஜயகுமார்