உதகை, மார்ச் 16- உதகையில் குடியிருக்க வீட்டுமனை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனுவை அளித்தனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள முத் தோரை பாலாடாவில் வசிக்கும் பொதுமக்கள் 40 க்கும் மேற்பட்டோர் மனுநீதி நாளான திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்திருந்தனர். இம்மனுவினை அளித்தபின் அவர்கள் கூறுகையில் எங்களுக்கு வீடு கட்ட இடம் இல்லாமல் வாடகை வீட்டில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். கூலி வேலை செய்து வரும் எங்களால் பிள்ளைகளைப் படிக்க வைப்பதே மிகவும் சிரமமாக உள்ளது. அரசு வீடு கட்டிக்கொள்ள கடன் உதவி செய்கிறது. இருந் தும் நிலம் இல்லாததால் அதனை பயன்படுத்தி வீடு கட்ட முடியவில்லை. மேலும், குடியிருக்கும் வீட்டினை காலி செய்ய சொல்லும்போது உடனடி யாக வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை. எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளதாக கூறினர். இதேபோல் குன்னூர் அருகே உள்ள வசம்பள்ளம், வள்ளுவர் நகர், வாசுகி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டுமனை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.