districts

img

குடிமனைப் பட்டா கேட்டு பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

தஞ்சாவூர், பிப்.6-  தஞ்சையில், திங்கள்கிழமை மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம், மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலை மையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், மாதர் சங்க மாநிலச் செயலா ளர் எஸ்.தமிழ்ச்செல்வி, சிபிஎம் பூதலூர்  தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர்  ஆகியோர் தலைமையில், செங்கிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட டி.பி.சானிடோரியம் பகுதியைச் சேர்ந்த நலிவுற்ற பொதுமக்கள் ஆட்சியரிடம் குடிமனைப்பட்டா கேட்டு மனு அளித்தனர்.  அந்த மனுவில், ‘‘சாதாரண கூலித் தொழிலாளிகளான நாங்கள் நீண்ட நாட்களாக சொந்த வீடு இல்லாமல், வாட கைக்கு குடியிருந்து வருகிறோம். டி.பி.  சானிடோரியம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் ஏராளமாக உள்ளது. அந்த இடத்தில் நலிவுற்ற நிலையில் இருக்கும் எங்களுக்கு மனைப் பட்டா வழங்கி வீடு கட்டித் தர வேண்டும்’’ என  மனுவில் கூறப்பட்டுள்ளது. சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், விவசாயிகள் சங்க  ஒன்றிய துணைச் செயலாளர் வின்சென்ட், நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.