tamilnadu

img

கொரோனாவில் மீண்டவர்கள் எண்ணிக்கை

20 சதவீதத்தை கூட இன்னும் தாண்டவில்லை

புதுதில்லி, ஏப்.24- இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது தேசிய அளவில் சராசரியாக வெறும் 20 சதவீதம் பேர் மட்டுமே குணமடைந்துள்ள னர். இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 4,749 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 6,430-ஐ தாண்டிவிட்டது. குஜராத்தில் 2,624 பேரும், தில்லியில் 2,376 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இராஜஸ்தானில் பாதிப்பு 1,964-ஐநெருங்கியுள்ள நிலையில், மத்தியப் பிரதேசத்தில் 1,699 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 1,658 பேர் பாதிக்கப்பட்டுள்ள னர்.

சில நாட்களுக்கு முன் இரண்டாம் இடத் தில் இருந்த தமிழகம், ஆறாவது இடத்திற்குச் சென்றுவிட்டது. முதல் 10 இடங்களின் பட்டிய லில் இருந்து கேரளா வெளியேறிவிட்டது. மத்திய சுகாதாரத்துறையை மேற்கோள் காட்டி, தற்போது வரை (வெள்ளிக்கிழமை காலை வரை) 20,971 பேருக்கு தொற்று உறு திப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இறப்பு எண் ணிக்கை 652 ஆக உள்ளதாகவும் இந்து நாளி தழ் தெரிவிக்கிறது. ஆனால் 718 பேர் உயிரி ழந்துவிட்டதாகவும் 23,077 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை இணையதளம் தகவல் வெளியிட்டுள் ளது.

கொரோனா தொற்றை உறுதிப்படுத்த ஆர்டிபிசிஆர் (RT-PCR) சோதனையை மாற்ற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநிலத் தலைமை செயலாளர் களுக்கு யூனியன் பிரதேச நிர்வாகங்களுக் கும் சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட் டுள்ளது. 

தொற்று பரவி வரும் சூழலில் மக்களைக் காப்பாற்ற தனித்துவமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறிப்பாக மனிதவளம், திறன் மேம்பாட்டு பயிற்சி, மருத்துவப் பாது காப்பு, சரியான நேரத்தில் மக்களுக்கு பணம் வழங்குதல், உளவியல் ரீதியான ஆதரவு, முன்னுரிமை அடிப்படையில் தொழிலா ளர்களுக்கு பயிற்சி, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங் களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது தேசிய அளவில் சராசரியாக 20 சதவீதம் பேர் மட்டுமே குணமடைந்துள்ள னர். மூன்று சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவாவில் ஏழு பேர் பாதிக்கப்பட்ட நிலை யில், அவர்கள் அனைவரும் குணமடைந்து வீட்டனர். கோவாவில் 100 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் முதன் முதலில் கொரோனா பாதிப்பை சந்தித்த கேர ளாவில் குணமடைவர்களின் எண்ணிக்கை யில் அதுதான் உச்சத்தில் உள்ளது. 75 சத வீதம் பேர் குணமடைந்துள்ளனர். ஹரியானா வில் 53 சதவீதம், தமிழ்நாட்டில் 40 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில் குண மடைந்தோரின் எண்ணிக்கை மிகவும் குறை வாக உள்ளது. அந்த மாநிலத்தில் பாதிப்பு 2 ஆயிரத்து 624-ஆக உள்ள நிலையில், 258 பேர் மட்டுமே இதுவரை குணமடைந்துள்ள னர். அந்த அந்த மாநிலத்தில் குணமடைந் தோர் சதவீதம் தேசிய சராசரியைவிட 12 சத வீதம் குறைவாக உள்ளது.