தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை துவங்கிய சிறிது நேரத்தில் காலியானது.
தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதைதொடர்ந்து சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 24-ஆம் தேதி பயணம் மேற்கொள்வோர் நேற்று முன் பதிவு செய்த நிலையில் அக்டோபர் 25-ஆம் தேதி பயணம் செய்வோர் இன்றும் அக்டோபர் 26-ஆம் தேதி பயணம் செய்வோர் நாளையும் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலானோர் ஆன்லைனில் முன்பதிவு செய்வதால் சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவுக் கவுண்டர்களில் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. ஆனால் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட ரயில்களில் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் முடிந்தது. பல முக்கிய ரயில்களில் காத்திருப்பு பட்டியலில் கூட முன் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.