tamilnadu

img

இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து மக்களவையில் பி.ஆர்.நடராஜன் கேள்வி

புதுதில்லி, மார்ச் 12-  சிறு, குறு மற்றும் நடுத்தர நிறு வனங்களில் வேலைவாய்ப்பு மற்றும் இடம்பெயர்ந்த தொழிலா ளர்கள் குறித்து கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் மக்களவையில் வியாழனன்று கேள்வி எழுப்பினார். இதற்கு சிறு,  குறு மற்றும் நடுத்தர நிறுவனங்க ளுக்கான மத்திய அமைச்சர் நித் தின் கட்கரி பதிலளித்துள்ளார்.  மக்களவையில் பி.ஆர்.நட ராஜன் எழுப்பிய கேள்வியில், மாநி லங்கள் வாரியாக, மாநிலங்களுக் கிடையே இடம் பெயர்ந்த தொழிலா ளர்கள் வேலை செய்யும் உரிமம் வழங்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன அமைப்புகளின் எண்ணிக்கை என்ன? தொழிலாளர் அமலாக்க அலுவலகத்திற்கு, சமர்ப்பிக்கப்பட வேண்டிய, மாநி லங்களுக்கிடையே இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய அறிக்கை கள் பற்றிய விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.  இதற்கு சிறு, குறு மற்றும் நடுத் தர நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பதிலளிக் கையில், இந்திய அரசின் தொழி லாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடமிருந்து பெறப் பட்ட அறிக்கையின்படி, மொத்தம் வழங்கப்பட்ட உரிமங்களின் எண் ணிக்கை மற்றும் இந்த உரிமங்க ளுக்குட்பட்ட மாநிலங்களுக்கி டையே இடம் பெயர்ந்த தொழிலா ளர்களின் எண்ணிக்கை ஆகி யவை இணைப்பில் கொடுக்கப்பட் டுள்ளன.  மாநிலங்களுக்கிடையே இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற் றிய (வேலை வாய்ப்பை ஒழுங்கு படுத்துதல் மற்றும் சேவைகள் நிபந்தனைகள்) மத்திய விதிகள், 1980 ன் படி, ஒவ்வொரு ஒப்பந்ததார ரும், வேலையிலிருந்து நிறுத்தப் பட்ட இடம் பெயர்ந்த தொழிலா ளர்கள் பற்றிய அறிக்கையை படி வம் XI ல், அவர்கள் நிறுத்தப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்கு மிகாமல், சம்பந்தப்பட்ட குறிப் பிட்ட அதிகாரிகளுக்கு, தனிப்பட முறையிலோ அல்லது பதிவு அஞ் சலிலோ வழங்க வேண்டும்.  இந்திய அரசின் வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தின் புள்ளி விவரங் களின் படி, ஏப்ரல் - அக்டோபர் 2019ன்படி உரிமம் வழங்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 297, (அக்டோபர் 2019ன் படி) இந்த உரிமங்களுக்குட்பட்ட இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 889 பேர் என அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.