புதுதில்லி, நவ. 14- ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சிறப்பு விசாரணை கோரிய சீராய்வு மனுக்களை தள்ளு படி செய்துள்ள உச்சநீதிமன்றம், ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறுவதற்கு முகா ந்திரம் இல்லை எனக் கூறியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி, உச்சநீதிமன்றத்தின் தலை மை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி கள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் அமர்வு ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடந்திருப்பதற்கு ஆதாரம் இல்லை எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் மனுக்களை தாக்கல் செய்தனர். ரபேல் தொடர்பாக ஊடக ங்களில் கசிந்த ஆவணங்களின் அடி ப்படையில் மறு ஆய்வு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என முறையிடப்பட்டது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி கள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரைக்கொண்ட அமர்வு விசாரித்தது. அனைத்துதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே மாதம் 10-ந் தேதி ஒத்தி வைத்தனர். 6 மாதங்களுக்கு பின்னர் வியாழனன்று வழங்கப் பட்ட தீர்ப்பில், ரபேல் மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனுக்கள் விசாரணைக்கு உகந்த வை அல்ல என கூறியுள்ள நீதிபதி கள், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துவிட்டனர். ராகுலுக்கு எதிரான மனு தள்ளுபடி
ரபேல் விவகாரத்தில், உச்சநீதி மன்றமே பிரதமர் மோடியை திரு டன் எனக் கூறிவிட்டதாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடி த்து வைத்திருக்கும் உச்சநீதிமன்றம், வருங்காலத்தில் பேச்சில் கவனம் தேவை என ராகுலுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது.