tamilnadu

img

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (திருத்தச்) சட்ட மசோதா -2019

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (திருத்தச்) சட்ட மசோதா -2019 கத்து வாவில் நடந்த சிறுமி ஆசிபா பாலியல் வன்புணர்வு மற்றும் படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுதும் மக்கள் மிகவும் ஆவேசத்து டன் கொதித்தெழுந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசாங்கம் குழந்தைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப் படுவதைத் தனிக் குற்றமாகப் பாவித்து இந்தியத் தண்டனைச் சட்டத்தைத் திருத்தி ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தது. மேலும் கூடுதலாக 2012ஆம் ஆண்டு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம் ஒன்று ஏற்கனவே இருந்து வருகிறது. அந்தச் சட்டத்தில் மரண தண்டனை என்று எந்த இடத்திலும் கிடையாது. அவசரச் சட்டம்தான் பாலியல் வன்புணர்வுக்கு மரண தண்டனையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சமயத்தில், உச்சநீதிமன்றம் எந்தக் குற்றத்திற்கும் மரண தண்டனை அளிப்பதைக் கட்டாயப்படுத்தவில்லை என்பதை நினைவு கூர்வது மிகவும் முக்கியமாகும்.  எனினும் குழந்தைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவது மிகப்பெரிய அளவில் மக்களின் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தியது. இத்தகு குற்றத்திற்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்பதற்கு  ஆதரவாக நிற்போர், மரண தண்டனை விதிப்பதன் மூலம் இக்குற்றத்தைத் தடுத்து விடலாம் என்று கருதுகிறார்கள். எனினும் இந்தியாவிலும் சரி அல்லது உலக நாடுகளிலும் சரி, நிலைமை அவ்வாறில்லை. உண்மையில், பல நாடுகள் இத்தகைய மரண தண்டனை விதித்திடும் சட்டப் பிரிவைக் கொண்டிருக்கவில்லை என்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

நிலுவையில் இருக்கும் 89 சதவீத வழக்குகள்
பாதிப்புக்கு உள்ளான சிறுமிகளுக்கு தைரியமூட்டி தேற்றுவது, மறுவாழ்வு அளிப்பது, இழப்பீடு அளிப்பது மற்றும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவை துரித மாக மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபின்னரும்கூட, இதுபோன்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப்படுவது என்பது வெறும் 20.6 சதவீதம் மட்டுமேயாகும். நாடு முழுதும் இவ்வழக்குகளில் 89 சதவீதம் இன்னமும் நிலுவையில் இருந்து வருகின்றன. உண்மையில், இதுபோன்ற வழக்குகளில் தண்டனையே அளிக்கப்படாமல் வழக்குகள் இழுத் தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், தண்டனையை மட்டும் அதிகரித்திட வேண்டும் என்று கூறுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, மரண தண்டனையைக் கொள்கையளவில் எதிர்க்கிறோம். நம் நாட்டின் சட்டப்புத்தகங்களில் அது இருக்கும் அதே சமயத்தில், அதனை இதுபோன்ற மிகவும் வெறுக்கத்தக்க வழக்குகளில் அரிதிலும் அரிதாகப் பயன்படுத்தலாம். ஆனால், மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், இக்குற் றத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றங்க ளில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான உதவிகள் அனைத்தும் செய்துதரப்பட வேண்டும் என்பதுதான்.

மக்களவையில் சிபிஎம் தலைவர் பி.ஆர்.நடராஜன் பேசியதிலிருந்து...