புதுதில்லி,பிப்.27- பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு வழக்கறிஞர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தில்லியில் நடைபெற்ற பன்னாட்டு நீதித்துறை மாநாட்டில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா, பிர தமர் நரேந்திர மோடி தொலை நோக்குப் பார்வை உடையவர். பல்துறைவல்லு நர், உலகளாவிய சிந்தனையாளர் என்று புகழ்ந்து தள்ளினார். இவரது பேச்சுக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து தெரிவிக்கை யில், இவ்வாறான புகழ்ச்சி நீதித்து றையின் சுதந்திரத்தைப் பாதிப்பதுடன் வழக்கு தொடுப்பவர்களின் நம்பிக்கை யையும் சிதைக்கும். வருங்காலத்தில் இதுபோன்ற பேச்சுக்களையும், அர சியல் தலைவர்களுடனான நெருக்கத்தையும் நீதிபதிகள் தவிர்க்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.