புதுதில்லி, மார்ச் 23- கொரோனா ஒழிப்பிற்காக இரவு பகல் பாராமல் பணியாற்றும் சுகாதாரத் துறை யினர், காவல்துறையினர், மாவட்ட நிர்வா கம், வருவாய் துறை மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்களுக்கு மரியாதை செலுத்த கைகளைத் தட்டுமாறும் பிரதமர் மோடி கூறியிருந்தார். பலரும் அவரது வேண்டுகோளை ஏற்று திங்களன்று மாலை 6 மணிக்கு கைத்தட்டல்களை வழங்கினர். இந்நிலையில், “எங்களுக்கு தைத்தட் டல் கள் தேவையில்லை; கொரோனா பாதிப் பிலிருந்து மக்களை மீட்பதற்கான நிவாரண உதவிகளை பிரதமர் மோடி வழங்கினால்; அதுவே போதும் என்று மருத்துவர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மனீஷா பங்கர் என்ற அந்த மருத்துவர், “இந்தியர்களே.. மோடி- பாஜக சொல்வதை யாரும் கேட்க வேண்டாம். எனக்காக யாரும் கை தட்ட வேண்டாம். நான் ஒரு மருத்து வர். எனக்கு உங்கள் கைதட்டல்கள் தேவை யில்லை” என்று பதிவிட்டுள்ளார். “கைத்தட் டல்களுக்கு பதிலாக பேரிடர் நிவாரண நிதி களையும் மற்ற உதவிகளையும் விரைந்து அளிக்குமாறு மோடி தலைமையிலான பாஜக அரசிற்கு கோரிக்கை வையுங்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.