புதுதில்லி,ஜூன் 5- மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழி முறைகளை மத்திய அரசு வெளி யிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அம லில் உள்ளது. ஊரடங்கில் பொது இடங் களை திறப்பதில் மூன்று கட்ட தளர்வு கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஜூன் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வழிபாட்டுத்தலங்களில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளி யிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்ப தாவது:
- நுழைவாயில்கள் கண்டிப்பாக சுகாதாரத்துடன் சானிடைசர்ஸ் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் வெப்ப அளவீடு செய்யும்முறை இருக்க வேண்டும்.
- அறிகுறிகள் இல்லாத நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். கொரோனா விழிப்புணர்வு குறித்த பதாகைகள் இருக்க வேண்டும். அதுதொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ தொடர்ந்து ஒளிபரப்பப்பட வேண்டும்.
- அனைத்து காலணிகளும் அவரவர் சொந்த வாகனங்களில் விட வேண்டும். இல்லையென்றால் தனித்தனியே குடும்பம் வாரியாக வைத்துக்கொள்ளலாம். தனிமனித இடைவெளியுடன் கூடிய முறையான பார்க்கிங் வசதி இருக்க வேண்டும்.
- வழிபாட்டுத் தலங்களை சுற்றி செயல்படும் கடைகள், உணவகங் களில் முறையான தனிமனித இடை வெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். வரிசையில் நிற்பவர்கள் இடை வெளியுடன் நிற்பதற்கு தரையில் குறியீடுகள் (வட்டம் அல்லது சதுரம்) வரைந்திருக்க வேண்டும்.
- முறையான நுழைவாயில் மற்றும் வெளியே செல்லும் வழி என தனித் தனியே இருக்க வேண்டும். வரிசை யில் நிற்கும்போது குறைந்தபட்சம் 6 அடி தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
- வளாகங்களுக்குள் நுழைவதற்கு முன்பு மக்கள் தங்கள் கைகளை சோப்பால் கழுவவேண்டும். இருக்கைகள் சமூக இடைவெளி யுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- ஏசி பயன்படுத்துவோர் அறிவிக்கப் பட்டுள்ள அளவீட்டை (24-30 செல்சியஸ்) பின்பற்ற வேண்டும். அவ்வப்போது புதிய காற்று உள்ளே நுழையும்படி வழிவகை செய்திருக்க வேண்டும்.
- சிலைகள், சிற்பங்கள், புத்தகங்களை தொடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. அதிக அளவு மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது. அத்துடன் பஜ னைகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் அனுமதி இல்லை. ஒருவரை ஒருவர் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
- வழிபாட்டில் ஈடுபடுவோர் தங்கள் சொந்த துணிகளை கொண்டு வந்து வழிபட வேண்டும். பின்னர் அவர்களே அதை கொண்டு செல்ல வேண்டும்.
- பிரசாதம் அல்லது தீர்த்தம் உள்ளிட்டவற்றை நேரடியாக வழங்கக் கூடாது. சமுதாயக் கூடங்கள், அன்னதானம் உள்ளிட்ட வற்றில் பார்செல் செய்து தனிமனித இடைவெளியுடன் வழங்க வேண்டும்.
- கழிவறைகள், கை - கால்கள் கழுவு மிடம் ஆகிய இடங்களை முறையாக பராமரித்து அங்கே சானிடைசர்களை வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.