tamilnadu

img

தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி 4.3% ஆகக் குறைந்தது

மத்திய அரசின் புள்ளி விபர அறிக்கையில் தகவல்\

புதுதில்லி, செப்.14- உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக தொழிற்துறை உற் பத்தி ஜூலை மாதத்தில் 4.3 சதவிகித மாகக் குறைந்து விட்டதாக, மத்திய அரசே தனது புள்ளிவிவர அறிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளது. மத்திய புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கப் பிரிவு வெளியிட்ட அறிக்கை யில் இதுபற்றி மேலும் கூறப்பட்டிருப்ப தாவது: 2019 ஏப்ரல் - ஜூனில் தொழிற்துறை உற்பத்தி 3.3 சதவிகிதம் என்ற விகிதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 5.4 சதவிகிதம் என்ற அளவிற்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல, கடந்த ஆண்டு ஜூலை யில் 7 சதவிகிதமாக இருந்த தொழிற் துறை உற்பத்தி வளர்ச்சி 2019 ஜூலையில் 4.2 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. காகிதம் மற்றும் காகித உற்பத்தித் தொழிற்சாலை, மோட்டார் வாகனங்கள், ட்ரெய்லர் மற்றும் செமி ட்ரெய்லர் வாகன உற்பத்திப் பிரிவு, பிரிண்டிங் மற்றும் ரெக்கார்டட் மீடியா, மறு உற்பத்தித் துறை ஆகியவற்றிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. உற்பத்தித் துறையில் 23 தொழிற்துறை குழுமங்களில் 13-இல் மட்டுமே வளர்ச்சி காணப்படுகிறது. உணவுப்பொருள் உற் பத்தி தொழிற்துறை 23.4 சதவிகிதம் வளர்ச்சியும் அடிப்படை உலோக உற்பத்தி 17.3 சதவிகிதமும், ஆயத்த ஆடைத் தயா ரிப்பு 15 சதவிகிதமும் வளர்ச்சியில் உள்ளது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.