மத்தியில் கருத்தொற்றுமை உருவாக வேண்டியது அவசியமாகும். அதன்மூலம்தான் தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையையும், ஒருமைப்பாட்டையும் கொண்டுவர முடியும். தற்போதைய நிர்வாகம், அஞ்சல் வாக்குகளை எப்படியெல்லாம் பயன்படுத்தக்கூடும் என்று குறிப்பிட வேண்டிய தேவை இல்லை.ஏற்கனவே தேர்தலுக்கு நிதி அளிப்பதன் மீது தேர்தல் பத்திரங்கள் ஏற்படுத்தியுள்ள பிரச்சனைகள் குறித்து உச்சநீதிமன்றம், எவ்விதமான தீர்ப்பும் பிறப்பிக்காமல் இன்னமும் நிலுவையில் இருந்து வரும் நிலையில், தேர்தல் சம்பந்தமாக அரசியல் கட்சிகளின் வருமானம்/செலவினங்கள் குறித்து கண்காணிப்பதிலும் மேற்பார்வை செய்வதிலும் இது ஒரு மாபெரும் சவாலாக இருக்கிறது என்று தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இப்போது புதிதாக அஞ்சல் வாக்குகளைப் பயன்படுத்த முடிவு செய்திருப்பது ஆளும் கட்சிக்கு ஆதரவாக கணிசமான அளவிற்கு நிலைமையை மேலும் உருவாக்குவதற்கே இட்டுச் செல்லும்.
எனவே, நாட்டில் தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்துவதை அடிப்படைக் கொள்கையாகத் தொடர்ந்து நீடித்திட, அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பை உத்தரவாதப்படுத்திட, காலங்காலமாக இருந்துவரும் நடைமுறைகளையே உயர்த்திப்பிடித்து, அனைத்து அரசியல் கட்சிகளுடனும் முறையாகவும் வெளிப்படைத்தன்மை யுடனும் கலந்தாலோசனை எதுவும் செய்யாமல் இத்தகையமாற்றங்களை ஒருதலைப்பட்சமாக அமல்படுத்துவதை தொடரக் கூடாது என்று இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு, சந்தேகத்திற்கிடமின்றி தெரிவித்துக்கொள்கிறோம்.இந்தியத் தேர்தல் ஆணையம் இதனை ஆக்கபூர்வமான முறையில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். (ந.நி.)