tamilnadu

img

‘ஏர் இந்தியா’ நிறுவனம் விரைவில் தனியார்மயமாகும்

புதுதில்லி:
‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை முற்றிலும் தனியார் மயமாக்குவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக சிவில் விமானபோக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.பொதுத்துறை நிறுவனமான ‘ஏர் இந்தியா’, மோசமானநிர்வாகத்தாலும், மத்திய அரசின் அலட்சியம் காரணமாக வும், நஷ்டத்தில் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2018-19 நிதியாண்டில் இந்த நிறுவனம், ரூ.7 ஆயிரத்து 600 கோடி நஷ்டத்தைசந்தித்து இருந்தது. இதைக் காரணமாக வைத்தே, ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை முழுமையாக தனியாருக்கு விற்க மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.ஏர் இந்தியாவைத் தனியாருக்குக் கொடுக்கப் போவதை,மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் உறுதிப்படுத்தியுள்ளார்.வியாழக்கிழமையன்று தில்லியில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பூரி, “ஏர் இந்தியாவை தனியார்மயமாக்க அரசு உறுதி கொண்டுள்ளது; ஒரு சிறந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்; அதை குறுகிய காலத்தில்செய்து முடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.‘ஏர் இந்தியா’வை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டுவதாகவும், அவ்வாறு வாங்குபவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.