tamilnadu

புதுச்சேரியில் ஒரே நாளில் 9 பேர் பலி

புதுச்சேரி, ஆக.18- புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் 9 பேர் பலி யான சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரு கிறது. தினசரி 300க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கபடுகின்ற னர். எனவே நோயை கட்டுபடுத்த அனைவருக்கும் பரிசோதனை  செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகின்றது. புதிதாக 370 பேருக்கு நோய் தொற்று புதுச்சேரியில் செவ்வாய்கிழமை (ஆக. 18) வெளியான பரி சோதனை முடிவில் புதிதாக 370 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்  பட்டுள்ளனர். மேலும் 9 பேர் உயிரிழந்தனர். இதனால் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 8,396 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 123 ஆக வும் உயர்ந்துள்ளது.

 இதுவரை 57,025 பரிசோதனைகள் செய்யப்  பட்டுள்ளது. இதில் 47,202 பரிசோதனைகள் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது. 709 முடிவுகள் வரவேண்டி உள்ளது.  இத்தகவலை  சுகா தாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் கூறியுள்ளார். பொதுமுடக்கம் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வாரத்தில்  செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் பொதுமுடக்கம் என்று புதுச்சேரி  அரசு அறிவித்தது. அதன்படி  செவ்வாயன்று பிரதான சாலை களான அண்ணாசாலை, நேருவீதி, காந்தி வீதிகளில் உள்ள வணிக நிறு வனங்கள் மூடப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்களில் 50 விழுக்காடு  ஊழியர்கள் வந்திருந்தாலும், அரசு அலுவலகப் பணிகள் நடைபெற வில்லை. பால், மருந்துகள் கடைகள் மட்டும் திறந்திருந்தன. இதேநிலைதான் கிராமப்புறத்திலும் காணப்பட்டது. மக்கள் தேவை யின்றி வெளியே வரவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.