கொள்கை அளவில் இறங்கி வந்தது மத்திய அரசு
மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு - உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
சென்னை, ஜூன் 20- உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மருத்துவப்படிப்பில் இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சத வீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பிர மாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. கொள்கை அளவில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஒப்புக் கொண்டாலும், நடப்புக் கல்வியாண் டில் அதனைநடைமுறை படுத்த முடி யாது என்பதாக பிரமாண பத்திரத்தில் ஒரு தடையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இடஒதுக்கீடு விஷயத்தில் அந்தந்த மாநிலங்களில்ஏற்கனவே இருக்கும் நடைமுறையை பின்பற்ற அனுமதி அளிக்கப்படுவதாக கூறி விட்டு, ஆனால் 50 சதவீதத்திற்கு மேலாக இடஒதுக்கீடு வரம்பு செல்லக் கூடாது என்றும் மத்திய அரசு குழப்பியுள்ளது. மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடங்கள் வழங்கப்படாமல் இருந்தன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கண்டித்தன. 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பிலும், தி.மு.க., மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், மதிமுக, அதிமுக, பாமக., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதி பதிகள், மத்திய அரசு பதிலளிக்க உத்தர விட்டனர். அதன்படி, மத்திய சுகாதார சேவைகள் இயக்குநரக உதவி தலைமை இயக்குனர் ஸ்ரீனிவாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற் படிப்புகளுக்கு உச்சநீதிமன்றம் வகுத்த திட்டத்தின் அடிப்படையில், பட்டிய லின மற்றும் பழங்குடியின வகுப்பி னருக்கு இடஒதுக்கீடு வழங்கி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப் படுவதாகவும் உச்ச நீதிமன்ற உத்தர வின்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்க னவே உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த வழக்கு ஜூலை 8 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ள தாகவும் மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அகில இந்திய ஒதுக் கீட்டு இடங்களில் 27 சதவீத இடஒதுக் கீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் மத்திய சுகாதாரத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மரு த்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங் களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம். ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகா மல் இருக்க வேண்டும் எனவும் கூறப் பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள் ளது.
தற்போது பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் தலையிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் மாநில அளவில் பின் பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை அனுமதிக்கலாம் என திட்டமிட்டுள்ள தாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 1986ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் தவிர, பிற கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக் கீட்டு இடங்களுக்கு இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை எனவும் விளக் கம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவை யில் உள்ளதால், அந்த வழக்கில் தங்க ளையும் இணைத்துக் கொள்ளும்படி, மனுதாரர்களுக்கு உத்தரவிட வேண் டும் என்றும் மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் வரும் திங்கள் கிழமையன்று மீண்டும் விசாரணைக்கு வருகின்றன.