நாமக்கல், நவ. 2- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத் திற்குட்பட்ட கிளாப்பாளையம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் பால் கூட்டுறவு சங்க திறப்பு விழா வெள் ளியன்று நடைபெற்றது. கிளாப்பாளையம் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் செய்ய சுமார் 2 கி.மீ., தூரத்திலுள்ள இலுப்பிலி சென்று வந்தனர். இதனால் பால் உற்பத்தியாளர்கள் கடும் சிரமத் திற்கு உள்ளாகி வந்தனர். ஆகவே, இப்பகுதியில் பால் கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், விநாயகர் கோவில் அருகில் உள்ள அரசு கட்டிடத்தில் ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலமாக பால் கூட்டுறவு சங்கத்தை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் ஆவின் துணை பொது மேலாளர் மருத்துவர் திருமுருகன், ஆவின் விரிவாக்க அலுவலர் தனபால், எலச்சிபாளையம் கால்நடை மருத்துவர் பாலாஜி, கிளாப்பாளையம் ஊராட்சி செயலாளர் சௌந்தர் உட்பட இப் பகுதி விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.