tamilnadu

அரசுக் கல்லூரி அருகே  இரண்டு டாஸ்மாக் கடைகள்

சீர்காழி, ஜூன் 1- சீர்காழி அருகே ஒரே இடத்தில் அமைந்துள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி பகுதி புத்தூரில் ஒரே இடத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகள் அருகருகே உள்ளன. புத்தூரிலிருந்து மாதானம் செல்லும் பிரதான சாலை ஓரத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையும் மற்றும் 25 மீட்டர் தொலைவில் மற்றொரு டாஸ்மாக் கடையும் இயங்கி வருகிறது.  இந்த மதுபானக் கடையிலி ருந்து 50 மீட்டர் தொலைவில் அரசு  தொழில்நுட்பக் கல்லூரியும் செயல் பட்டு வருகிறது. மேலும் மதுப்பிரி யர்களின் செயலால் சாலை ஓரத்தில் மதுபாட்டில்கள் உடைக்கப் பட்டு கிடக்கின்றன. மாணவர்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என காமராஜ் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.