தரங்கம்பாடி, செப்.8- நாகை மாவட்டம் தரங்கம்பாடி புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசி ரியை குழந்தை தெரஸ் என்பவருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆசி ரியை குழந்தை தெரஸ் திருமணமே செய்து கொள்ளாமல் மாணவர்களுக்கு கல்வி சேவையை அளிப்பதையே தனது வாழ்க்கையாக கருதி சேவை செய்து வருவது குறிப்பி டத்தக்கது. விருது பெற்ற ஆசிரியைக்கு பள்ளி தாளாளர், தலை மையாசிரியர், சக ஆசிரியைகள், ஊழியர்கள், பெற்றோர் கள் வாழ்த்து தெரிவித்தனர்.