மன்னார்குடி, செப்2- நாகை மாவட்டம் வேதாரண்யத் தில் உள்ள நாகக்குடையான் கிரா மத்தில் உள்ள பெரிய ஏரி சியூபி வங்கி யின் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் தூர் வாரி கரைகள் உயர்த்தி மேம்படுத் தப்பட உள்ளது. இதுகுறித்து சியூபி நிர்வாக இயக்கு நர் காமகோடி கூறியதாவது: கடந்த 118 ஆண்டுகளாக மக்கள் சேவையில் சியூபி தொடர்ந்து பணியாற்றி தனது சேவைத் திட்டங்களில் ஒன்றான சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் வரை செலவு செய்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஒரத்தநாடு, கும்பகோணம், மன் னார்குடி, திருத்துறைப்பூண்டி நகரங்களைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் ஏரி, குளம், நீர்நிலைகளை தூர்வாருதல், கரைகள் உயர்த்துதல் போன்ற பணிகளை சியூபி திறம்பட செய்து வருகிறது. தற்போது வேதாரண்யம் அருகே நாகக்குடையானில் 268 ஏக்கர் பரப்ப ளவு கொண்ட பெரிய ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி, ஆழப்படுத் தும் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்து ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வீதம் 4 ஆண்டுகளில் 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளது. முன் னதாக வேதாரண்யம் வந்த வங்கி நிர்வாக இயக்குனர் காமகோடி, அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ரதிமீனா பஸ் சர்வீஸ் உரிமையாளர் சேகர், நாகை சுந்தரராமன் ஆகியோரை வேதாரண்யேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் மாரியப்பன் தலைமை யிலான அலுவலர்கள் வரவேற்றனர். வங்கியின் சார்பில் ரூ. 10 லட்சம் மதிப் பீட்டில் வழங்கப்பட்ட தேர் பாதுகாப்பு கூண்டை பார்வையிட்டார். பின்னர் சியூபி நிர்வாக இயக்கு னர் காமகோடி அமைச்சர் ஓ.எஸ்.மணி யன், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் ஆகியோருடன் நாகக்குடையான் கிரா மத்திற்குச் சென்று ஏரியை பார்வை யிட்டார். அமைச்சர் ஏரியின் தன்மை, பயன்பெறும் விவசாய நிலங்களின் அளவுகள் மற்றும் தூர்வாரப்பட வேண்டிய ஏரியின் வரைபடம், அதன் திட்ட மதிப்பீடுகள் குறித்த அறிக்கை யை அளித்தார். வேதாரண்யம் தாசில் தார், ஒன்றிய ஆணையர் தியாக ராஜன், கூட்டுறவு வங்கித் தலை வர்கள் கிரிதரன், எழிலரசு, அம்பிகா தாஸ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்கள் உடனிருந்த னர்.