நாகை,அக்.01- பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்ததையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம் பட்டமங்கலம், ஆதமங்கலம், வலிவலம், கோவில் கண்ணாப்பூர், தெற்கு பனையூர், கொடியாலத்தூர் ஆகிய 6 கிராமங்களில் 146 வீடுகள் கட்டாமலேயே கட்டியதாகக் கணக்குக் காட்டி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.