tamilnadu

img

சீகன்பால்கு வாழ்ந்த வீட்டில் ஜெர்மனி ஓவியர்களின் சர்வதேச சுற்றுலா ஓவியக் கண்காட்சி

தரங்கம்பாடி, பிப்.9-  நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் ஜெர்மனி நாட்டு ஓவியர்களான மோரிஸ் குட்சோ அவரது நண்பர் ரூட்ரி கோ ஜெப்பிரின் ஆகியோரின் சர்வ தேச ஓவிய கண்காட்சி சனிக்கிழமை துவங்கியது.  கி.பி.1706-ல் கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்கில் தரங்கம்பாடி வந்து தமிழ் மொழிக்காகவும், தமிழ் கலாச்சா ரத்திற்காகவும் பாடுப்பட்ட வரும், இந்தியாவிலேயே முதன் முதலாக பைபிளை தமிழில் காகிதத்தில் அச்சு  இயந்திரம் மூலம் அச்சடித்து வெளி யிட்டவருமான ஜெர்மனி நாட்டை சேர்ந்த தமிழறிஞர் சீகன் பால்கு வாழ்ந்த அட்மிரல் தெருவிலுள்ள அவ ரது வீட்டை, ஜெர்மன் நாட்டின் பண்பா ட்டு பாதுகாப்பு அமைப்பு மற்றும் தமிழ்  சுவிசேஷ லுத்தரன் திருச்சபை, பழமை  மாறாமல் புதுப்பித்து 2017-ல் ‘சீகன்பால்கு பண்முக பண்பாட்டு அருங்காட்சியகம்’ என்ற பெயரில் மையத்தை திறந்தனர். அங்கு சீகன்பால்கு பயன்படுத்திய பொருட்கள், 18 ஆம் நூற்றாண்டு அச்சு இயந்திரம், சீகன்பால்கு வெளியிட்ட  பைபிள் மாதிரி என ஏராளமான பழமை யான வரலாற்று ஆவணங்கள் பாது காக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்ப ட்டுள்ளன. உலகின் பல்வேறு நாடு களிலிருந்து நாள்தோறும் நூற்றுக்கண க்கானோர் பார்வையிட்டு செல்லும் இங்கு, பல்வேறு நாடுகளில் ஓவிய கண்காட்சியை நடத்திய ஜெர்மனி நாட்டவரின் சர்வதேச சுற்றுலா ஓவிய கண்காட்சி நடைபெற்றது.  கண்காட்சியை அருங்காட்சியக காப்பாச்சியர் ஜாஸ்மின் எப்பர்ட் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். தச லுதி பேராயர் டேனியல் ஜெயராஜ் மற்றும் திருச்சபை நிர்வாகிகள், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், கும்பகோணம் ஓவியக்கல்லூரி மாண வர்கள், வரலாற்று ஆய்வாளர் பேராசி ரியர் மரியலாசர் உள்ளிட்ட ஏராளமா னோர் விழாவில் கலந்து கொண்டனர். ஜெர்மன் நாட்டை சேர்ந்த மோரிஸ் குட்சோ அவரது நண்பர் ரூட்ரிகோ ஜெப்பிரின் ஆகியோர் சர்வதேச ஓவிய கண்காட்சியை நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாட்டி லும் மக்களின் பழங்கால கலாச்சா ரங்களையும் தற்போது உள்ள கலாச்சா ரங்களையும் அறிந்து அதை ஓவியங்க ளாக வரைந்து காட்சிப்படுத்தி வரு கின்றனர். 50 நாடுகளில் சுற்றுபயணம் மேற்கொண்டு அந்தந்த நாடுகளின் பழைய மற்றும் புதிய கலாச்சாரங்களை தங்களின் ஓவியங்கள் மூலம் வெளி படுத்துவதாகவும் கூறிய அவர்கள், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சீகன் பால்கு  வாழ்ந்த தரங்கம்பாடியில் தற்போது  ஒரு வாரக்காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சீகன் பால்கு காலத்தி லுள்ள அவர் வரைந்த ஓவியங்கள் மற்றும் பழமையான உலகம் எவ்வாறு  இருந்தது, தற்போது உள்ள உலகம்  மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதை அனைவரும்  புரிந்து கொள்ளும் வகையில் ஓவிய ங்களை வரைந்து காட்சிப்படுத்தி வரு வதாகவும் தெரிவித்தனர். அவர்கள் வரைந்த ஓவியங்களை தரங்கம்பாடி சீகன்பால்கு வாழ்ந்த இல்லத்தில் நிரந்தர  கண்காட்சியாக வைத்துள்ளனர். அந்த ஓவியங்களை ஏராளமான பொதுமக்கள், ஓவியக்க ல்லூரி மாணவர்கள், வெளிநாட்ட வர்கள் ஆர்வமுடன் பார்வையிடுவது மகிழ்ச்சியாக இருப்பதாக பெருமையு டன் ஓவியர்கள் இருவரும் கூறினர்.