tamilnadu

img

கீழ்வெண்மணி தியாகிகளுக்கு சிபிஎம் சார்பில் நினைவஞ்சலி!

வெண்மணி தியாகிகளின் 57 ஆம் ஆண்டு நினைவஞ்சலி சிபிஎம் சார்பில் இன்று, நாகை மாவட்டம் கீழ்வெண்மணியில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் நடைபெற்று வருகிறது. 
அரைப்படி நெல் கூலி உயர்வுக் கேட்டதற்காகவும், சாணிப்பால், சவுக்கடி, சாதிய ஒடுக்குமுறையிலிருந்து தங்களைப் பாதுகாக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும், செங்கொடியையும் விட்டுத்தர மாட்டோம் என்று முழங்கியதற்காக, 1968 ஆம் ஆண்டு, வெண்மணி கிராமத்தில், பெண்கள், குழந்தைகள் என 44 விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஆண்டைகளால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். அதுமுதல், விவசாயத் தொழிலாளர்கள் நடத்திய வர்க்கப் போராட்டத்தின் நினைவுச் சின்னமாக விளங்கி வரும் வெண்மணி தியாகிகளின் 57 ஆம் ஆண்டு நினைவஞ்சலி சிபிஎம் சார்பில் இன்று, நாகை மாவட்டம் கீழ்வெண்மணியில் வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் நடைபெற்று வருகிறது. 
மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து தலைமையிலான இந்நிகழ்ச்சியில், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செங்கொடியை ஏற்றி வைத்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மத்தியக் கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் அ.சவுந்தரராசன், மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் நாகை மாலி.எம்.எல்.ஏ., எம்.சின்னதுரை.எம்.எல்.ஏ., அகில இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், ஏ.ஏ.ரஹீம்.எம்.பி, மூத்த தலைவர் ஏ.லாசர், எழுத்தாளர் எஸ்.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.