நாகப்பட்டினம், மார்ச் 8- கம்யூனிச இயக்கத்தின் முன்னோடித் தலைவரும், திருவாரூர் சட்டமன்ற முன் னாள் உறுப்பினருமான வி. தம்புசாமி, மார்ச் 7 காலை 10 மணிக்கு இயற்கை எய்தி னார். அவருக்கு வயது 86. உடல் நலக் குறைவு கார ணமாக, நாகை மாவட்டம், எட்டுக்குடியில் அவரது இல் லத்தில் காலமானார். 8-ம் தேதி பிற்பகல் அவரது இறுதிப் பயணம் அவர் இல்லத்திலி ருந்து புறப்பட்டது. சி.பி.எம். நாகை மாவட்டச் செயலாளர் நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.மாரிமுத்து, ஏ.வி.முருகையன், கீழையூர் ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன், சி.பி.எம்., சி.பி.ஐ. மற்றும் அரசியல் கட்சித்தலை வர்கள் அவரது உடலுக்கு மாலை வைத்து இறுதி மரி யாதை செலுத்தினர்.
கே.பாலகிருஷ்ணன் இரங்கல்
தோழர் வி.தம்புசாமி மறைவுக்கு இரங்கல் தெரி வித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: கட்சியின் ஒன்றுபட்ட திரு வாரூர் மாவட்டச் செயலாள ராக பணியாற்றிய தோழர் வி.தம்புசாமி உடல்நலக் குறைவின் காரணமாக நேற்று (சனிக்கிழமை) மறைந்தார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு அஞ்சலி செலுத் துகிறது. ஒன்றுபட்ட திருவாரூர் மாவட்டச் செயலாளராக வும், நாகை மாவட்டச் செய லாளராகவும் பல ஆண்டுகா லம் சிறப்பாக பணியாற்றிய வர். இரண்டு முறை சட்ட மன்ற உறுப்பினராக செய லாற்றியவர். தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநி லத் தலைவராக செயலாற்றி யவரும், விவசாய சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டவருமான தோழர் வி.தம்புசாமி அவர்க ளின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்க லைத் தெரிவித்துக்கொள்கி றது. அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தா ருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.