பெங்களூரு, பிப்.6- பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளில், சாமியார் நித்தியானந்தா நீதிமன்றத் தில் ஆஜராகாமல், 40 முறை வாய்தா வாங்கி யிருந்த நிலையில், அவ ருக்கு கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, ‘செக்’ வைத் துள்ளார். நித்தியானந்தா கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று உத்தர விட்டுள்ள குன்ஹா, இதி லிருந்து தப்பித்து விட லாம் என்று கணக்குப் போட்டு, நீதிமன்றத்திடம் ஜாமீன் எதுவும் கேட்டு வந்துவிட வேண்டாம் என் றும் கூறியுள்ளார்.