கோவிந்த் பன்சாரே நினைவு நாள்
கோவிந்த் பன்சாரே, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முதுபெரும் கம்யூனிஸ்ட். 1964 இல் வழக்குரைஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். கோலாப்பூர் வழக்கறிஞர்கள் மன்றத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் பதவி வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து அரசியல் பணியாற்றினார். மூடநம்பிக்கைகளுக்கும் சனாதனத்திற் கும் இந்துத்துவா கொள்கைகளுக்கும் எதி ராக எழுதியும் பேசியும் வந்தார். சுங்கச் சாவடிகளின் முறையற்ற வரி வசூல் போக்கை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார். தோழர் கோவிந்த் பன்சாரே 21 நூல்களை எழுதினார். அவை பெரும்பாலும் சமூகக் கேடுகளைச் சுட்டிக்காட்டுவன ஆகும். ‘சிவாஜி யார்?’ என்னும் நூலை எழுதியதால் பெரும் திறனாய்வுக்கு உள்ளானார்.
2015 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 16 ஆம் நாள் அன்று பன்சாரே தம் மனைவி உமா பன்சாரேவுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் அவர்களைத் துப்பாக்கி யால் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றனர். துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான பன்சாரே வின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிப்ரவரி 20 இல் காலமானார். அவரது மனைவி உமா காயங்களுடன் உயிர் தப்பினார். மத்தியிலும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் பா.ஜ.க தலைமையிலான அரசுகள் கோலோச்சிய கால கட்டத்தில்தான் கோவிந்த் பன்சாரே கொல்லப்பட்டார். அவரது படுகொலையின் பின்னால் ‘சனா தன் சன்ஸ்தா’ எனும் சங்பரிவார அமைப்பு இருந்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது மத்திய அரசின் பாசிசத் தன்மையையே காட்டுகிறது.
பெரணமல்லூர் சேகரன்