tamilnadu

img

வாஷிங் மெஷினில் துவைத்தே கட்சியில் சேர்க்கிறோம்!

மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் ராவ்சாகிப் தான்வே பாட்டீல். மத்திய அமைச்சரான இவர், அண்மையில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், மகாராஷ்டிர மாநிலத்தில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் 17பேர், பாஜக-வில் இணைவ தற்குத் தயாராக இருப்பதாக கூறியிருந்தார். இது கடந்த சிலநாட்களாக பரபரப்பை ஏற் படுத்தி வந்தது. இந்நிலையில், வியாழனன்று ஜால்னா மக்களவைத் தொகுதியில் நடை பெற்ற விழா ஒன்றில், தான்வே பாட்டீல் மீண்டும் பேசியுள்ளார். அப்போது, “அடுத்த கட்சியி லிருந்து வருபவர்களை, நன்றா கத் துவைத்து சுத்தம் செய்த பிறகே, பாஜக-வில் சேர்த்துக் கொள்கிறோம்” என்று புதிய சர்ச்சையை ஆரம்பித்து வைத் துள்ளார். இதற்காக “பாஜக-வில் வாஷிங்மெஷின் வைத்திருப்ப தாகவும், பாஜக-வில் இணைய வருபவர்களை, அந்த இயந்தி ரத்திற்குள் போட்டு துணியைத் துவைப்பது போல நன்கு துவைத்து, அதன்பிறகே கட்சி யில் சேர்த்துக் கொள்கிறோம்” என்றும் பாட்டீல் கூறியுள்ளார். மேலும், சுத்தம் செய்வ தற்கு, தங்களிடம் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ‘நிர்மலாவாஷிங் பவுடர்’  (மோடி - அமித்ஷா) உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.