tamilnadu

img

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கிய ஒன்றிய பாஜக அரசு திமுக கூட்டணிக் கட்சிகள் இன்றும், நாளையும் போராட்டம்!

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கிய ஒன்றிய பாஜக அரசு திமுக கூட்டணிக் கட்சிகள் இன்றும், நாளையும் போராட்டம்!

சென்னை, நவ. 19 -  கோவை மற்றும் மதுரை நகரங்களுக் கான மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணி சார்பில், இன்று (நவ. 20) மதுரையிலும், நாளை கோவையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இதுதொடர்பாக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலை வர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி. நிதிப் பகிர்வில் பாரபட்சம் காட்டுவதும், மாணவர்களின் கல்வி நிதியைக் கூட ஒதுக்க மறுப்பதுமாக தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக் கணித்து வரும் ஒன்றிய பாஜக அரசு தற்போது கோவை, மதுரை மெட்ரோ ரயில்  திட்டங்களையும் முடக்கி வஞ்சித்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு செயலாற்றி வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வியாழக்கிழமை (நவ.20) அன்று  கோவையிலும், வெள்ளிக்கிழமை (நவ.21) அன்று மதுரையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம்: முதல்வர் உறுதி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது சமூகவலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கோவில் நகர் மதுரைக்கும், தென்னிந்திய மான்செஸ்டர் கோவைக்கும் மெட்ரோ வேண்டாம் என நிராகரித்துள்ளது, ஒன்றிய பாஜக அரசு. அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக, இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக்கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம். அதேபோல மதுரை மற்றும் கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம். இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தமிழகத்திற்கு மோடி அரசு துரோகம்!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, தமிழ் நாட்டின் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங் களுக்கு ஒன்றிய பாஜக அரசு முட்டுக்கட்டை போட்டிருப்பதாக வும், இது தமிழக மக்களுக்கு செய்யப்படும் மற்றுமொரு துரோகம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை விடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: மோடி தலைமையிலான பாஜக அரசு, தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரங்களான கோவை மற்றும் மதுரை ஆகிய இரண்டு மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என அறிவித்திருக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் பாரபட்சமான இத்தகைய நடவடிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். 2017-ஆம் ஆண்டில் அறிவிக்கப் பட்ட தேசிய மெட்ரோ ரயில் திட்டக் கொள்கையின் படி 20 லட்சத்திற்கும் அதிகமான மக்களை கொண்ட மாநகரங்களுக்குத்தான் மெட்ரோ ரயில் திட்டத்தை வழங்க முடியும் எனவும், தமிழக நகரங்களான கோவை மற்றும் மதுரையின் மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவாக இருப்பதால் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற முடி யாது எனவும் ஒன்றிய பாஜக அரசு மறுத்திருக்கிறது. பாஜக அரசின் இத்தகைய அறி விப்பு மிகவும் மோசடியான ஒன்றா கும். ஏனெனில் கடந்த 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக் கெடுப்பைக் கொண்டே இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டிருக் கிறது. கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களில் கடந்த 15 ஆண்டு களில் அதிகரித்துள்ள மக்கள் தொகை மற்றும் இரண்டு மாநக ராட்சிகளின் எல்லைகள் சமீபத்தில் விரிவாக்கப்பட்டிருக்கும் நிலை ஆகியவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.  மேலும், பாஜக ஆளும் மாநி லங்களில் மக்கள் தொகை குறை வாக உள்ள வேறு பல நகரங்களுக்கு அனுமதி அளித்திருக்கும் நிலை யில் தமிழ்நாட்டிற்கு மட்டும் அனு மதி மறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. இது கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதி ரானது என்பதை சுட்டிக்காட்டு கிறோம். தமிழ்நாட்டின் உள்கட்ட மைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான வளர்ச்சிக்கு நிதி  ஒதுக்காமல் முட்டுக்கட்டை போடு வது, தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி.  நிதி ஒதுக்கீடு விஷயத்தில் பார பட்சம் காட்டுவது, மதுரை எய்ம்ஸ்  திட்டத்தை கிடப்பில் போடுவது என தொடர்ந்து பாஜக தமிழ்நாட்டை வஞ் சித்து வருவதன் தொடர்ச்சியாகவே மெட்ரோ ரயில் திட்ட அனுமதி மறுப்பு அறிவிப்பும் உள்ளது. எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சி யோடு இப்பிரச்சனையை அணு குவதை கைவிட்டு, கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகர மக்களின் தேவை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு இவ்விரு நகரங் களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக துவங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஒன்றிய பாஜக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.