tamilnadu

பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான கடைகளை ஏலம் விடத் தடை

மதுரை, ஜூன் 26 -   பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலுக்கு சொந்தமான 61 கடைகளை ஏலம் விடுவதற்கு  இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி முருகன் கோவிலுக்கு சொந்த மான கடைகளில் வாடகைக்கு குடி யிருக்கும் கடை வாடகைதாரர்கள் சுரேஷ்  பாபு,  லட்சுமணன் உள்ளிட்ட 61 கடை  உரிமையாளர்கள் சார்பில் உயர்நீதிமன்ற  மதுரைக்கிளையில் மனு  தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பழநி தண்டாயுத பாணி கோவிலுக்கு சொந்தமான கடை களில், பல ஆண்டுகளாக வாட கைக்கு குடியிருந்து வருகிறோம்.  இந்த  கடைகளில் வாடகை உயர்த்தியது,  புதி தாக ஏலம் விடும் அறிவிப்பு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை மற்றும்  மேல்முறையீட்டு அமைப்புகள் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடை பெற்றது. இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி  பழனி கோவில் நிர்வாகத்தினர், ஒரு  வாரத்தில் கடைகளை காலி செய்யுமாறு தெரிவித்தனர்.  அதைத் தொடர்ந்து கடை களை ஏலம் விடுவதற்கான  டெண்டர் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.  இதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், கோவில் நிர்வாகம் வாடகை  உயர்த்துவது போன்று  சேதங்களுக்கான பராமரிப்பு  தொகை   என பல முறை கட்டணங்களை உயர்த்தியுள்ளது.  எனவே எவ்வித முன் அறிவிப்பும் இன்றி, நோட்டீஸ் வழங்காமல்  கடை களுக்கு  ஏலம் விட ஆயத்தமாகி வரு கின்றனர் .  ஆகவே, கடைகளை ஏலம் விட தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை புதனன்று நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நடைபெற்றது. அப்போது,  பழனி கோவிலுக்கு சொந்தமான 61 கடைகளை ஏலம் விடுவதற்கு  இடைக்கால தடை விதித்தும்,  இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.