விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் தேவை
சென்னை, செப்.29 - கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசா ரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (செப்.28) மாலை அருணா ஜெகதீசன் ஆணையம் சார்பில் ஐந்து பேர் கொண்ட குழுவினர், நெரிசல் ஏற்பட்டு பலர் உயி ரிழந்த கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசா ரணை நடத்தினர். திங்களன்று (செப்.29) இரண்டாவது நாளாக சம்பவ இடத்தில் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த இடம், மருத்துவ மனை, உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று விசாரித்தனர். இதற்கிடையே கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் தேவை என நீதிபதி அருணா ஜெகதீசன் கூறியுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் குறித்து முழுமையாக விசா ரிக்க வேண்டும். பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பதை அறிய சம்பவ இடத்தில் மீண்டும் ஆய்வு செய்ய உள்ளதாகவும், விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க கால தாமதம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.