tamilnadu

img

நகைக்கடன் புதிய விதிமுறைகளை கைவிட வேண்டும்!

நகைக்கடன் புதிய விதிமுறைகளை கைவிட வேண்டும்!

ரிசர்வ் வங்கிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

சென்னை, மே 22- “நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகள் என்ற பெயரில் ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகள், நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செய லாகும். ஆகையால், ரிசர்வ் வங்கி  உடனே இத்தகைய கட்டுப்பாடு களைத் திரும்பப் பெற வேண்டும்” என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். வங்கிகள் மற்றும் வங்கி சாரா  நிதி நிறுவனங்கள் தங்க நகைக் கடன் வழங்குவது தொடர்பாக 9 புதிய வரைவு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரி வித்து வருகின்றனர்.  இந்நிலையில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலைதளத்தில் வெளி யிட்டுள்ள பதிவில், “தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்ற வற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறை கள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது. குறிப்பாக, நகையின் மதிப்பில் முன்பை விட 5 சதவிகிதம் குறைத்து, 75 சதவிகிதம் தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அவசர தேவைக்காக வங்கிகளை நாடி வரும் மக்க ளை நேரடியாகப் பாதிக்கும் முடி வாகும். அவசரம் என்று வரும் மக்க ளை அத்தியாவசியமற்ற விவரங் களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும்.  அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அட மானம் வைக்க முடியும் என்ற புதிய விதிமுறையைக் கடந்த மாதம் ஆர்பிஐ கொண்டு வந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற் போது மேலும் புதிய 9 விதிமுறை கள் என்ற பெயரில் கட்டுப்பாடு களைக் கொண்டு வந்துள்ளது, நேர டியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும். ஆர்பிஐ  உடனே இத்தகைய கட்டுப்பாடு களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.” இவ்வாறு தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.