tamilnadu

காந்தியைக் கொன்ற கோட்சேவின் வாரிசுகள் தான் தேசத் துரோகிகள்!

காந்தியைக் கொன்ற கோட்சேவின் வாரிசுகள் தான் தேசத் துரோகிகள்!

திமுக தலைவரும் முதலமைச்சரு மான மு.க. ஸ்டாலின், திமுக தொண்டர் களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு. அதில் கைவைப்பது ஆபத்து. கட்டாயமாக ஒரு மொழி யைத் திணித்தால் அது பகை யுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும், நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

மொழிப் போராட்டம்

மொழித்திணிப்பினால் பிளவுபட்ட  தேசங்களின் வரலாறு நம் பக்கத்தி லேயே இருக்கிறது. கிழக்கு வங்கா ளத்தினர் தங்கள் தாய்மொழியான வங்காளத்தையும் தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி, பாகிஸ்தான் நாடா ளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். போராட்டங்களை நடத்தினர். 1971-இல் கிழக்கு வங்காள மக்களின் விடுதலைப் போராட்டம் உச்சத்தை எட்டியது. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் ஆதரவுடன் விடுதலைப் போராட்டம் வென்றது. வங்கதேச விடுதலைக்காக இந்திய ராணுவம் பங்கேற்ற போரின்போது, இந்தியாவிலேயே மிக அதிக நிதியை அளித்த மாநிலம் என்ற பெருமையைப் பெற்றது கலைஞரின் ஆட்சி நடைபெற்ற தமிழ்நாடு.

தேசத் துரோகிகள் யார்?

பிரதமர் நேருவின் ஆட்சிக்  காலத்தில் சீனா படையெடுத்த போது, இந்தியா பாகிஸ்தான் போரின் போதும் இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் முன்னோடியாகப் போர் நிதி திரட்டித்தந்த தி.மு.க.வை யும் அதன் அரசையும் பார்த்து தேசவிரோதிகள் என்கிறார்கள், தேசத் தந்தையைப் படுகொலை செய்த கோட்சேயின் கொள்கையை ஆதரிப்பவர்கள்.

பிறமொழிகளை மதிக்கிறோம்..

நம் தாய்மொழி போலவே மற்ற வர்களின் தாய்மொழியையும் மதிக் கிறோம். இந்தியைத் தாய்மொழி யாகக் கொண்டவர்களும் நம் சகோதர சகோதரிகள்தான். இந்திய அரசியல் சட்டம் 351-ஆவது பிரிவைச் சுட்டிக்காட்டி, இந்தி மொழியை வளர்க்கும் பொறுப்பை ஒன்றிய அரசு தீவிரமாக மேற்கொள்கிறது. செப்டம்பர் 14-ஆம் நாளை ‘இந்தி திவஸ்’ என்ற பெயரில் கொண்டாடு கிறது. அந்த நாளில், இந்தித் திணிப்பு முழக்கங்களை ஒன்றிய ஆட்சி யாளர்கள் முன்வைக்கிறார்கள். ஆனால், ‘கன்னடத்தைப் புறக் கணித்து, இந்தியைத் திணிப்ப வர்களை ஏற்க மாட்டோம்’ என்று கூறிக் கர்நாடகாவில் இந்தி எழுத்து களை அழிப்பது பற்றிய காணொலி சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்கத் தயக்கம் ஏன்? அண்ணா அன்று மாநிலங்கள வையில் கேட்டதைத்தான் அவரது  தம்பிகளான நாங்களும் கேட்கி றோம். அவரால் பெயர் சூட்டப்பட்ட எங்கள் தமிழ்நாடு கேட்கிறது. லட்சியம் நிறைவேறும் வரை கேட்டுக்கொண்டே இருப்போம்.” இவ்வாறு முதலமைச்சர் கூறியுள் ளார்.