tamilnadu

img

நூறு நாள் வேலைத்திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும்! தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக தீர்மானம்!

நூறு நாள் வேலைத்திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும்! தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக தீர்மானம்!

சென்னை, ஜன. 23- தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை மகாத்மா காந்தி பெய ரிலேயே தொடர வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானம் நிறை வேற்றியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த அரசினர் தீர்மானத்தை, பாஜக-வைத் தவிர அனைத்துக் கட்சிகளும் ஆதரித்து ஒரு மனதாக நிறைவேற்றின. சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, முதலமைச்சர் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் 2005-ன்படி, கிராமப்புற மக்களின் வேலைக் கான உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தேவைக்கேற்பவும், மாநில செயல்திறன் அடிப்படையிலும் தொடர்ந்து நிதியொதுக்கீடு செய்வது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதுகாக்கப்பட, முந்தைய ஆண்டு களின் ஒதுக்கீட்டிற்குக் குறையாமல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. உத்தேச மதிப்பீட்டின் அடிப்படை யில் தன்னிச்சையாக ஒன்றிய அரசு  நிதியொதுக்கீடு செய்யும் தற்போதைய புதிய நடைமுறையைக் கைவிட்டு, ஏற்கெனவே பின்பற்றப்பட்ட வேலைக் கான தேவைக்கேற்ப நிதியொதுக்கீடு செய்யும் நடைமுறையைத் தொடர  வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டது. கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளித்து, மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டினை, வேலைக்கான தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் வழி முறையை மாநில அரசே வகுத்துக் கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்றது. புதிய திட்டத்தில் மாநில அரசின் நிதிப்பங்களிப்பு 40 சதவிகிதமாக உயர்த்தப்படுவது மாநில அரசின் நிதிச் சுமையை கணிசமாக அதிகரிப்பதாக இருப்பதால், புதிய திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பி னைப் போலவே திருத்தி அமைக்கப் பட வேண்டும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பெயரை நீக்கி, பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்டு, இத்திட்டத்திற்கு ‘வளர்ச்சியடைந்த இந்தியா ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் ஊரகம்’ (VB-G-RAM-G) எனப் பெயர்  மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி இந்த தேசத்திற்கு வகுத்துத் தந்த கொள்கைகளையும், வழிகாட்டிய பாதையையும் எப்போ தும் நினைவுகூரும் வகையில் இத்திட் டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் ஆதரவு இதைத் தொடர்ந்து விவாதம் நடை பெற்றது. பாஜகவைத் தவிர்த்து மற்ற அனைத்து கட்சி உறுப்பினர்களும் உரையாற்றி தீர்மானத்தை ஆதரித்த னர். பல்வேறு கட்சி உறுப்பினர்களும் இந்த அரசினர் தனி தீர்மானத்தை வரவேற்று பேசினர். பிரதமரிடம் இபிஎஸ் வலியுறுத்த வேண்டும்! இதைத்தொடர்ந்து முதல்வர் பேசுகையில், பிற்படுத்தப்பட்ட விளிம்பு நிலையில் உள்ள மக்களின் சமூக பாதுகாப்பைத் தகர்த்திடும் வகையில் கொண்டுவரப்பட்ட ஒன்றிய அரசின் இந்த புதிய திட்ட நட வடிக்கைக்கு எதிராக தமிழகம் கொண்டுவந்த தீர்மானம் மீது உறுப்பி னர்கள் பேசியதற்கு நன்றி தெரிவித் தார். பிரதமர் தமிழகம் வருவதால் எதிர்க்கட்சித் தலைவர் அவரைச் சந்திக்கச் சென்றிருப்பதை சுட்டிக் காட்டிய முதல்வர், இந்த திட்டம் தொடர்பாக பேரவையில் எதிர்க்கட்சி  துணைத் தலைவர் உதயகுமார் வைத்த கருத்துகளை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பிரதம ரிடம் எடுத்துச் சொல்வார் என எதிர் பார்ப்பதாகவும், இதனை இங்குள்ள வர்களும், தமிழ்நாடு மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்றும் கூறினார். அதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அவைத் தலைவர் மு. அப்பாவு அறி வித்தார். இந்த தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.